கோவை, அக்.21- கூடுதல் கட்டணம் வசூல் செய்தது மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயக் கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொது மக்கள் செல்கின்றனர். இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை யடுத்து, மத்திய வட்டாரப் போக்கு வரத்து கழக அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக மாநகரில் பல்வேறு பகுதி களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி செலுத்தாத 18 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து துறை அதி காரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். பறிமுதல் செய்யப் பட்ட பேருந்துகள் வட்டாரப் போக்கு வரத்து கழக அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். இதேபோல், நாமக்கல் மாவட்ட போக்குவரத்து ஆணையர் தலை மையில் வட்டாரப் போக்குவாத்து அலுவலர் நாமக்கல் (வடக்கு) மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாமக்கல் (தெற்கு) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் இணைந்து சோதனை மேற்கொண் டனர். இந்த சோதனையில், ஆம்னி பேருந்துகள் உரிய சாலை வரி செலுத் தப்படாமலும், அனுமதிச்சீட்டு பெறா மலும் குறைபாடுகளுடன் இயக்கப் பட்ட 4 ஆம்னிப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்தில் 3 வாகனங்களும், நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 1 வாகனமும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.