districts

img

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

தருமபுரி, ஜன.12- ஏ.கோடுப்பட்டி கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட் சிக்குட்பட்டது ஏ.கோடுப்பட்டி கிரா மம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். கோடுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பவளந்தூர் பகுதி யில் இருந்து ஏ. கோடுபட்டி வரை பிஎஸ்என்எல் டவர் அமைப்பதற் காக சாலையோரத்தில் குழிகள் தோண் டப்பட்டு, வயர்கள் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.  இப்பணியின் போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஏ.கோடுபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்பகுதிகளுக்கு ஒகே னக்கல் குடிநீர் முறையாக கிடைக் காத நிலை தொடர்கிறது. இதுகு றித்து பலமுறை ஒகேனக்கல் கூட் டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் அலட்சிய மாக பதில் தெரிவித்துள்ளனர். இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பென்னாகரம் செல் லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்கா ணிப்பாளர் மகாலட்சுமி, பென்னா கரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, இளங்குமரன், கிராம நிர் வாக அலுவலர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது, குழாய் உடைப்பை சரி செய்து, கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக் கும் முறையாக குடிநீர் விநியோகிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என உறு தியளிக்கப்பட்டது. இதனால் சமாதா னமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென் றனர்.