districts

ஜப்பான் நிறுவன அதிகாரிகள் விரைவில் தருமபுரியில் ஆய்வு

தருமபுரி, மார்ச் 8- ஒகேனக்கல் 2 ஆவது கூட்டுக்குடி நீர் திட்டப்பணிகளை மேற்கொள்ள, ஜப்பான் நிறுவன அதிகாரிகள் விரை வில் தருமபுரிக்கு வந்து ஆய்வு மேற் கொள்ள உள்ளதாக வேளாண் மற் றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரி வித்துள்ளார். தமிழக முதல்வர் வருகை இதுதொடர்பாக அவர் தருமபுரி யில் செய்தியாளர்களிடம் கூறுகை யில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் வரும் மார்ச் 11 ஆம் தேதி தரும புரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வருகை தர உள் ளார். இந்த விழா தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடை பெற உள்ளது. இதற்கான மேடை, பந் தல் அமைக்கும் பணி தற்போது  நடைபெற்று வருகிறது. இவ்விழா வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து  உரையாற்றுகிறார். வளர்ச்சித் திட் டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்பு கள் இவ்விழாவில் அறிவிக்கப்பட லாம். ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப தருமபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில், ஒகே னக்கல் 2 ஆவது கூட்டுக்குடிநீர் திட் டத்தை சற்றேக்குறைய ரூ.8 ஆயிரம் கோடியில் தொடங்குவதற்கான அறி விப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள் ளது. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் தொடங்கப்பட உள்ள இத்திட்டத்துக் கான தொடக்கநிலைப்பணிகள் நடை பெற்று வருகின்றன. விரைவில் ஜப் பான் நிறுவன அதிகாரிகள் தரும புரிக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் மகளிர் உரி மைத்தொகை திட்டம், விடியல் பய ணத்திட்டம் உட்பட மகளிர் முன்னேற் றத்துக்கான எண்ணற்ற திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித் தார்.