districts

img

வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், டிச.26- வெண்மணி தியாகிகளின் 55  ஆவது நினைவு தினத்தை முன் னிட்டு, விவசாய தொழிலாளர் சங் கத்தின் சார்பில் கொடியேற்று விழா  நடைபெற்றது. வீர வெண்மணி தியாகிகளின் 55  ஆம் ஆண்டு நினைவு தினம் நாமக் கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் அனுசரிக்கப்பட்டது. அதன் படி, பள்ளிபாளையம் ஒன்றியம், படைவீடு கிராமத்தில் ஆர்.நாகப் பன் தலைமையிலும், சின்னார பாளையத்தில் வி.சண்முகம் தலை மையிலும், பல்லக்காபாளையத் தில் கோவிந்தசாமி தலைமையி லும், தட்டாங்குட்டையில் குரு சாமி தலைமையிலும், நேரு  நகரில் சின்னத்தாயி தலைமையி லும் விவசாய தொழிலாளர் சங்க  கொடியேற்று விழா நடைபெற்றன.  இதேபோல், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  கொடியேற்று விழா பள்ளிபாளை யம் ஒன்றியம், வஞ்சிபாளையத் தில் சித்ரா தலைமையிலும், தொப் பப்பட்டியில் ஊராட்சி துணைத் தலைவர் குப்பண்ணன் தலைமை யிலும் நடைபெற்றது. இதில், சங் கத்தின் மாவட்டத் தலைவர் சி.துரை சாமி, மாநிலக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ் உட்பட பலர் கலந்து  கொண்டனர். இதேபோல், மாவட் டம் முழுவதும் நடைபெற்ற இந்நி கழ்வில் நூற்றுக்கணக்கான விவ சாய தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் கலந்து  கொண்டனர். கோவை வெண்மணி தியாகிகள் தின பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை எஸ்எஸ்.குளம் மேற்கு ஒன்றியம் உருமாண்டம் பாளையம் 13ஆவது வார்டுக் குட்பட்ட பகுதியில் நடைபெற் றது. கட்சியின் மூத்த தோழர்  ராமகிருஷ்ணன் தலைமையேற் றார். வெண்மணி வீரத்தியாகிகளின் தியாகங்கள் குறித்தும், விவசாய  வர்க்கம், தொழிலாளி வர்க்கம்  ஒன்றுபட வேண்டிய அவசியம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் சிறப்புரை யாற்றினார்.

முன்னதாக, எஸ்எஸ்.குளம் மேற்கு ஒன்றியப் பகுதியின் கிளை தோழர்கள் வீடுவீடாக திரட்டிய கட்சி நிதி ரூ2லட்சத்து 75 ஆயிரம்  ரூபாயை முதற்கட்டமாக மாநிலச்  செயற்குழு உறுப்பினர் முத்துக் கண்ணனிடம் வழங்கினர். இந்நி கழ்வில், கட்சியின் கோவை மாவட் டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கோ பால், மேற்கு ஒன்றியச் செயலாளர் சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாநகராட்சி மாமன் றக்குழு தலைவர் வி.ராமமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் ஜே.உஷா, சிபிஎம் 13 ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர் சுமதி மற்றும்  நா.கா.புதூர் சண்முகம் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர். முடி வில், சம்பத்  நன்றி கூறினார். இதேபோன்று, கோவையில் சூலூர், மதுக்கரை, சிங்காநல்லூர், ஆவராம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெண்மணி நினைவு தின  கூட்டங்கள் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பி னர்கள் யு.கே.சிவஞானம், வி.தெய் வேந்திரன், வி.ஆர்.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, மதுக்கரை ஒன்றியச் செய லாளர் பஞ்சலிங்கம், சிபிஎம் சூலூர்  தாலுகாச் செயலாளர் சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் வி.பி.இளங் கோவன், தாலுகாச் செயலாளர் எஸ்.சி.சண்முகம், தாலுகாத் தலை வர் எம்.மணியன், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் எம்.விவேகானந்தன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.