கோவை, அக்.21- பணியின் போது மரணமடைந்த காவ லர்களுக்கு வீரவணக்க நாள் சனியன்று அனு சரிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற பல் வேறு சம்பவங்களின் போது உயிரிழந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை நினைவுகூரும் வகையில் காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதியன்று காவல் துறை சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாநகர காவல் துறை சார்பில், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. இந் நிகழ்வு, கோவை மாநகர காவல் ஆணை யாளர் வி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப் பட்டது. இதில் மாநகர காவல் ஆணையாளர் உட்பட காவல் அதிகாரிகள் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் இதில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.