districts

img

ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், ஆக.19- ஆங்கிலேய கிழக்கிந்திய படைகளுக்கு எதிராக போர் புரிந்த ஒண்டிவீரனின் 252 ஆவது நினைவு தினம் அனு சரிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கம் செலுத்திய காலத்தில், வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பூலித்தேவனின் படை தளபதிகளில் ஒருவராக விளங்கிய ஒண்டிவீரனின் 252 ஆவது நினைவு தினம் சனியன்று அனு சரிக்கப்பட்டது. ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருச்செங் கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். இதில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில், தலைமை செயற்குழு உறுப் பினர் நடேசன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திரா விடர் விடுதலைக் கழக நகரச் செயலாளர் பூபதி, ஆதித்தமி ழர் பேரவையின் மாவட்டத் தலைவர் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.