உதகை, ஆக.26- ஓவேலி அருகே விளைநிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பயிர்கள், வீடுகளை சேதப் படுத்தி வருகிறது. இதனால் பொதுமக் கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் காட்டு யானை தாக்கி உயிரி ழந்துள்ளனர். இதனால் காட்டு யானை கள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் வலியுறுத்தினர். இதனால் பேரூ ராட்சி முழுவதும் வனத்தையொட்டி உள்ள பகுதிகளில் 5 இடங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அறிய கண்கா ணிப்பு கோபுரம் மற்றும் முகாம் அமைக் கப்படும் என வனத்துறையினர் உறுதி யளித்தனர். இதையொட்டி கடந்த காலங் களில் கண்காணிப்பு கோபுரம் அமைப்ப தற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வனத்துறை யினர் ஈடுபட்டு வந்தனர். இதில், காந்தி நகர் கிராமத்தை ஒட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த காலங்களில் பணி தொடங்க உள்ள சூழலில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப் பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளியன்று கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை சமப்படுத்தும் பணி பொக்லைன் எந்தி ரம் உதவியுடன் தொடங்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் விவசாய நிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக் கக்கூடாது. வனத்துறையினருக்கு சொந் தமான நிலத்தில் கோபுரம் அமைக்க வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சி யர் ராஜேஸ்வரி உள்ளிட்ட வருவாய் உதகை, ஆக.26- நீலகிரியில் வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ள நிலையில், ஆக.19 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள் ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து தயா ரிக்கப்பட்டுள்ளது. அதில், திருத்தி அமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடிகளில் பட்டியல்கள் மற்றும் திருத்தங்கள் மேற் கொள்வதற்கான பிரேரணைகள் மாவட்ட தேர்தல் அலுவல ரும், ஆட்சிருமான சா.ப.அம்ரித் தலைமையில் புதனன்று துறை அலுவலர்கள் முன்னிலையில், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனை, கருத்துக்கள் தெரி விக்க விரும்பினால், ஆக.29 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் வனத்துறையினர் அமைக்கும் கோபு ரம் எந்த வகை நிலம் என்று தெரிவித்த பிறகு, கட்டுமான பணிகளில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்ற னர்.