districts

img

சென்னை போராட்டத்திற்கு புறப்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

சேலம், ஏப்.19- சென்னையில் நடைபெற உள்ள போராட் டத்தில் பங்கேற்பதற்காக சேலத்திலிருந்து புறப்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத் தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்  சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்திலி ருந்து இரண்டு பேருந்துகளில் சத்துணவு ஊழியர்கள் சென்னை செல்ல புறப்பட்ட னர். அப்போது அம்மாபேட்டை அருகில் காவல்துறையினர், சென்னைக்கு சென்று கொண்டிருந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரை தடுத்து நிறுத்தி, கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த அரசு ஊழியர் சங்கத்தினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று காவல்துறையிடம் முறையிட் டனர். ஆனால், போராட்டம் நடத்த சென் னைக்கு செல்லக் கூடாது என உத்தரவு வந் துள்ளது. அதனால் தடுத்து நிறுத்தினோம் என கூறினர்.

மேலும், குடிநீர், உணவு கூட வழங்காமல் இரவு முழுவதும் மண்டபத்தி லேயே அடைத்து வைத்ததாக சத்துணவு ஊழியர்கள் குற்றச்சாட்டினர். இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கத் தின் மாநில செயற்குழு உறுப்பினர் அமரா வதி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமி ழக அரசு கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே பெருந்திரள் முறையீடு நடத்த திட்டமிட்டி ருந்தது. தமிழக முதல்வரின் தேர்தல் வாக்கு றுதியை நிறைவேற்றி தரக்கோரி சென்னை  செல்ல இருந்த நிலையில், தற்போது சேலம் மாநகர காவல்துறையினர் இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு உட்படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது. சத்து ணவு ஊழியர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கை யான காலமுறை ஊதியம் வழங்க வேண் டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க இருந்த நிலை யில், இந்த கைது நடவடிக்கை மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், பெண் கள் என்றும் கூட பாராமல் இரவு நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தது மிகுந்த கண்டனத்துக்குரியது என அவர் தெரி வித்தார். இச்சந்திப்பின்போது, சத்துணவு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ வேலு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட தலை வர் என்.திருவேரங்கன், மாவட்ட பொருளா ளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.