தருமபுரி, மார்ச் 24- தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால், எனது மகள் சுய நினைவை இழந்துள்ளார் என குற்றஞ்சாட்டி, காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், சோளக் கொட்டாய் அருகே உள்ள லலா கொட்டாய் பகுதியைச் சேர்ந்த தங்க ராஜ் என்பவரின் மகள் காயத்ரி. இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனி யார் நர்சிங் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில், தருமபுரி யில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு காயத்ரி உடல் நிலையை சரி செய்து, ஸ்கேன் செய்யுமாறு அறி வுறுத்தியுள்ளனர். இதனைத்தொ டர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக்குடல் இருப்பது தெரியவந் துள்ளது. தொடர்ந்து அதே மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு, சாதா ரண நிலைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட் டிற்கு செல்லலாம் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அப்பொழுது காயத்ரிக்கு தடுப்பூசி போடப்பட்ட தாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்ட பின் காயத்ரி திடீரென மயக் கம் அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத் துவமனையில் உள்ள மருத்துவரி டம் தெரிவித்துள்ளனர். இதனைய டுத்து மருத்துவர் காயத்ரியை பரி சோதித்த பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு சேலம் தனியார் மருத்துவம னையில் காயத்ரியின் உடல்நிலை மோசமான நிலையில், சுயநினை வின்றி இருப்பதால் அவரை வீட் டிற்கு அழைத்து செல்லுமாறு அறிவு றுத்தியுள்ளனர். மேலும் மூளை, தண் டுவடம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது என்றும், மற்ற உடலுறுப்பு கள் எந்தவித குறைபாடுகள் இல்லா மல் இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காயத்ரியின் பெற் றோர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிக் சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் ஒட்டுக்குடல் சிகிச்சைக்காக வந்த காயத்ரிக்கு, தனியார் மருத்து வமனையில் மருத்துவர் கொடுத்த தவறான சிகிச்சையால் தற்பொ ழுது சுயநினைவின்றி இருந்து வரு கிறார். எனவே, காயத்ரியின் இந்த நிலைக்கு காரணமான மருத்து வமனை மீதும் மற்றும் மருத்துவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி தருமபுரி நகர காவல் நிலையத்தில் காயத்ரி யின் பெற்றோர் மற்றும் உறவினர் கள் புகாரளித்துள்ளனர். இதே போல், மாவட்ட ஆட்சியர் அலுவல கம், வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்திலும் புகாரளித்துள்ளனர்.