கோவை, அக்.5- கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை வியாழனன்று மேயர் கல்பனா ஆனந்த குமார் திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், கர்ப்பிணி பெண்கள் அலுவல் மற்றும் அரசு பணிகள் தொடர்பாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோவை வடக்கு மகளிர் வட்டம் 11 சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப் பட்டுள்ளது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வ சுரபி, கோவை வடக்கு மகளிர் 11 நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா, திட்ட ஒருங்கிணைப்பாளர் தீபிகா ஆகியோர் கலந்து கொண் டனர்.