திருப்பூர், ஜூலை 28- திருப்பூர் நகரின் மையத்தில் ஓடும் நொய் யல் ஆற்றின் இரு கரைகளிலும் பல்வேறு இடங்களில் கோழிக் கழிவுகள், ராசயனக் கழிவுகள் கொட்டப்பட்டு சுற்றுப்புறச் சூழல் சீரழிக்கப்பட்டு வருகின்றது. திருப்பூர் மங்கலம் பாதை ஆண்டிபாளை யத்தில் இருந்து அணைப்பாளையம் செல் லும் சாலையில் நொய்யல் ஆற்றுக்கு அரு கில் உள்ள ஓடை ஓரத்தில் பல்வேறு விதமான கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ் வாறு கொட்டப்படும் கழிவுகள் அந்தப் பகு தியில் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தி வரு வதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சீர்மிகு நகரம் என்பது வெறும் கான்கி ரீட் தளங்கள், சாலைகள் அமைப்பது மட்டும் தான் என அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் தேவை யானது என்னவோ நகரின் தூய்மையை மேம் படுத்துவதுதான் என்பதை அவர்கள் எப் போது உணரப் போகிறார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற ஆற்றங்கரை, ஓடை கரை யோர சாலைகளில், சாலை ஓரப் பூங்காக்கள் அமைத்தால் குப்பை கொட்டுவது தவிர்க்கப் படும். தூய்மை பராமரிக்க முடியும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யோசனை கூறு கின்றனர்.
மேலும் திருப்பூரின் முக்கியமான பின்ன லாடைத் தொழில், அதில் உற்பத்தியாகும் கழி வுகள், அவற்றை எப்படி சுற்றுச்சூழலுக்குத் தீங்கு இல்லாமல் அப்புறப்படுத்துவது என் பது பற்றி மாநகராட்சி மற்றும் அரசுத் துறை யின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வழங்கல், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கூட்டாக சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். இப்பிரச்சனை குறித்து, மக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம்தான் நிரந்தரத் தீர்வை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைச் செய்யாமல் சீர்மிகு நகரம் என பளபளப்பான கட்டமைப்புகளை உருவாக்கினால் அது தூய்மையைப் பரா மரிக்க உதவாது, மேலும் மேலும் சூழல் சீர் கேடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று கூறுகின்றனர். குப்பைகளை வெளியேற்றும் வழிமுறை களை ஆராயும் வேளையிலே, அதனை குறைக்கும் வழிமுறைகளையும் மக்க ளிடையே எடுத்துச் சொல்வது நிலைமை யினை ஓரளவு சீர்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தொலைநோக்குப் பார்வையுடன் மாநக ராட்சி மற்றும் பொதுப் பணித் துறை, தொழில் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருங்கி ணைந்து செயல்பட்டு நிரந்தரத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லா விட்டால் ஏற்கெனவே மரண விழிம்பில் இருக் கும் நொய்யல் ஆறு மற்றும் ஜம்மனை, சங்கி லிப்பள்ளம் ஓடைகள் மென்மேலும் நெருக்க டிக்குள் தள்ளப்பட்டு இறந்த நீர்நிலைக ளாக மாறக்கூடிய ஆபத்து உள்ளது என்ப தையும் திருப்பூர் மக்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.