சேலம், அக்.12- பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் அக்.28 ஆம் தேதி யன்று முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் நலசங்கம் அறிவித்துள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலை வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற் றது. இதைத்தொடர்ந்து மாநிலத் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் ஒரு லிட்டருக்கு 31 ரூபாயிருந்து 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 41 ரூபாயிருந்து 51 ரூபாயும் என கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து தொடர் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசுக்கு கவ னத்தை ஈர்க்கும் வகையில் பால் உற்பத்தி யாளர்கள் வரும் அக்.17 ஆம் தேதி முதல் அக்.20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நான்கு நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு கறவை மாடுகளை வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வரும் அக்.26 ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியா ளர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்பட வில்லை எனில், வரும் அக்.28 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும், என்றார்.