கோவை, டிச.19- தங்களது கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்றாவிட்டால், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் ஓய்வுபெற்றோர் அமைப்புக ளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழ கங்களின் வரவுக்கும், செலவுக்குமான தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும். கடந்த 8 ஆண்டு களாக வழங்காமல் இருக்கும் அக விலைப்படி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பதிவுசெய்த அனைவருக்கும் கருணை அடிப்படையில் வாரிசு வேலை உடனடியாக வழங்க வேண் டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையைத் துவக்கி, ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பலமுறை தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச்சங்கங்கள் சார்பில், அரசு அதிகாரிகள், கழக அதிகாரி களிடம் முறையீடு செய்தும், பிரச்சனை கள் தீர்க்கப்படவில்லை. எனவே, மேற் கண்ட கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். இல்லை யெனில் வரும் ஜன.5 அன்றோ அல்லது அதற்கு பின் 6 வார காலத்திற்குள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து, அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல மேலாண் இயக்குநர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சிஐடியு கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பரமசிவம், தலை வர் வேளாங்கன்னிராஜ், பொருளாளர் கோபால், ஏஐடியூசி சண்முகம், ஐஎன் டியூசி அ.தௌலத்கான், எச்எம்எஸ் ராஜா, டிடிஎஸ்எப் நடராஜன், எம்எல்எப் குமணன் மற்றும் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகி பி.செல்வ ராஜ், அதிகாரிகள் சங்கங்களின் ராஜாராம், கே.ஆர்.முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பணிமனை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மண்டல பொறுப்பாளர் பாலகிருஷ் ணன் தலைமை வகித்தார். இதில் போக்குவரத்து ஊழியர் சங்க கிளைச் செயலாளர் கருப்புசாமி, கிளைப் பொருளாளர் வெள்ளிங்கியரி, அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நலச் சங்க நிர்வாகி நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், போக்கு வரத்து கழக கிளை மேலாளர் கனக ராஜிடம் வேலை நிறுத்தம் குறித்த மனு வழங்கப்பட்டது. இதேபோன்று சத்திய மங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஈரோடு மண்டல தலைவர் கே.மாரப்பன் தலைமை வகித்தார். இந்த இயக்கத் தில், அனைத்து சங்க கூட்டமைப்பு மற்றும் ஓய்வுபெற்ற நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டம், உடுமலை போக்குவரத்து கிளை அலுவல கம் முன்பு நடைபெற்ற இயக்கத்திற்கு, சிஐடியு மண்டல துணைப்பொதுச் செயலாளர் வே.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் கிளைச் செயலாளர் கு.கார்த்திகேயன், தலை வர் ஆர்.பாபு, ஏஐடியுசி மண்டல துணைப்பொதுச்செயலாளர் நாக ராஜ், ஓய்வுபெற்றோர் நலச்சங்க உடு மலை செயலாளர் காளிமுத்து,பொரு ளாளர் நாச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், போக்குவரத்து கழக உடுமலை கிளைப் பொறுப்பாளர் கே.காந்தி, உதவிப்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரிடம் மனு வழங்கப்பட்டது.