கோவை, டிச.6- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் அனுமதியற்ற விளம்பர பலகை வைத் துள்ள நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். கோவை மாநகராட்சி, அலுவலக கூட்ட ரங்கில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் அனுமதியற்ற விளம்பர பலகையின் மீதான நடவடிக்கை மற்றும் விதிகளின்படி அனுமதி வழங்குவது குறித்த ஆய்வுக்கூட் டம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிர பாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எவ்வாறு விண்ணப் பங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்? என் னென்ன விதிகள் பின்பற்றப்பட வேண்டும்? எவ்வாறு விதிகளுக்குட்பட்டு விளம்பரங்கள் அமைக்கப்பட வேண்டும்? அனுமதியற்ற விளம்பர நிறுவனங்கள் மீதான புதிய சட்டத் தின் கீழ் தண்டனை என்ன? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ரயில்வே இட மாக இருந்தாலும், சாலை அருகே வைக்கப்ப டும் விளம்பர பலகைகளுக்கும் புதிய விதி பொருந்தும் என கூறப்பட்டது. அப்போது, ரயில்வே இடத்தில் பெரும்பா லான விளம்பரங்கள் விதிகளுக்கு புறம்பா கவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்த னர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தி னருக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் நோட் டீஸ் அனுப்ப ஆணையாளர் உத்தரவிட்டார். மேலும் மற்ற பகுதியிலுள்ள விதி மீறிய நிறுவனங்களுக்கும், கட்டிட உரிமையாளர்க ளுக்கும் நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.