districts

நீலகிரி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு

உதகை, ஜூலை 25- நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 382 மில்லிமீட்டர் மழை பதிவானது. குன்னூரில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் வீடு சேத மடைந்தது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதி களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி உதகை - மேட்டுப்பாளையம் மற் றும் கோத்தகிரி சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாக னங்களை ஓட்டி சென்றனர். உதகை சுற்று வட்டார பகுதியில் அவ்வப்போது லேசாக சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மேலும் அவலாஞ்சி, கூடலூர் பகு திகளில் பலத்த மழை பெய்து வந்தது. அதிக பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி யில் 382 மில்லி மீட்டர் மழை பதிவானது. மேலும், அப்பகுதியில் கடும் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக சில மின் கம்பங்கள் சேதமடைந்த தால், மின்சாரம் விநியோகத்தில் பாதிப்பு ஏற் பட்டது. அவலாஞ்சி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உயர்ந்துள்ளது.  குன்னூர் கண்டோன்மென்ட் வாரியத்திற் குட்பட்ட பாய்ஸ் கம்பெனி லோயர் குரூஸ் பெட் என்ற இடத்தில் மழை காரணமாக வீட்டு தடுப்புச்சுவர் இடிந்து, ஜான்சன் என்பவரது வீட்டின் மேல் விழுந்ததில் வீட்டின் மேற்புறம் சேதமடைந்தது. இடிந்த வீட்டில் ராணுவ வீரர் களான முகேஷ், உத்தம், ஹர்மன், லோபிரித்  ஆகியோர்  வாடகைக்கு தங்கியுள்ளனர். அவர் களுக்கு நல்வாய்ப்பாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. குன்னூர் தீயணைப்பு வீரர் கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிலிருந்த பொருட்களை இடம் மாற்றினர். மேலும் மின் சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை - கிளன்மார்கன் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி  அகற்றினர். இதேபோல் உதகையில் செவ்வாயன்று காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால், உதகை படகு இல்லத் தில் மிதி படகு மற்றும் துடுப்பு படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.  தாவர வியல் பூங்கா உட்பட ஒரு சில இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. நாள் முழுவதும் குளிர் அதிக மாக இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.