உலகில் வாழும் மக்கள் யாரும் யாருக்கும் அடிமை யாக இருக்கக் கூடாது என் றும், அவ்வாறு அடிமைக ளாக இருப்பவர்களை மீட்டெ டுக்கும் நோக்கிலும் ஐநா சபை யால் ஆண்டுதோறும் டிசம்பர் 2 ஆம் தேதி சர்வதேச அடிமை கள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனித இனம் பொதுவுடமைச் சமூகமாக இருந்த வரை அங்கு அமைதியும் சமத்துவமும் இருந்ததே தவிர வர்க்க பேதமோ வர்ணக்கோட்பாடுகளோ இல்லை. தனியுடைமை என்று சமூகத்தில் தோன்றியதோ, அன்று மனிதர்கள் குழுக் களாக பிரிந்தனர். போட்டிகளும், பொறாமைகளும், போராட் டங்களும் உருவாகின. சாதி, மதம், இனம், மொழி, நிறம் ஆகியவை இப்போட்டிகளுக்கு துணை நின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நகரத்தை நோக்கி பயணித்தது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தொழிற் புரட்சிக்கு வித்திட்டது. முதலாளிகள் தங்களது கொள்ளை லாபத்திற்காக தொழிலாளர்களை சுரண்ட ஆரம்பித்தனர். இல்லாமையும், இயலாமையும் மனிதர்களை அடிமைகளாக் கியது. மூன்று வேளை உழைப்புக்கு ஒரு வேளை உணவு ஊதியமாக வழங்கப்பட்டது. தனிநபர்களை அடிமைப்படுத்திய ஆதிக்க சக்திகள், தேசங்களை அடிமைபடுத்த ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஏகா திபத்தியம் உலகெங்கிலும் காலனி நாடுகளை உருவாக்கி யது. இந்த காலனி நாடுகள் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் உற்பத்தி பொருட்களுக்கு சந்தையாகவும் செயல்பட்டன. சகிப்புத்தன்மையை இழந்து சாமானியர் கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். போராட்டங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. போராட்டக் களங்களில் செங் குருதி ஆறானது. இறுதியில் விடுதலை வேரானது. காலனி நாடுகள் விடுதலை பெற்றன. பெரும்பாலான நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்தது. மக்கள் தங்களுக்கான அரசை தாங்களே தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், இன்று ஆதிக்க சக்திகள் மறுபடியும் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. தங்களுக்கு இடையூறாக இருக் கும் ஜனநாயகத்தை வேரறுக்கும் முனைப்போடு செயல் பட்டு வருகின்றன. சாதி, மதம், இனம், மொழி என மக்களை பிளவுபடுத்தி அடிமைப்படுத்த எத்தனித்து வருகிறது. ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றுபட்டு, ஒற்றுமை சாட்டையை சுழற்றிட இந்நாளில் உறுதி ஏற்போம். மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் கனவை நனவாக்கு வோம்! -முத்திவீரணன்