districts

img

அடுப்பில்லா சமையல் போட்டி

நாமக்கல், செப்.9- பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  சனியன்று அடுப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசினர் ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத  விழாவை முன்னிட்டு, மாணவ - மாணவிகளுக்கு ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட துறையின் சார்பாக அடுப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது. ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்  தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித் தார்.  தொடர்ந்து பள்ளிபாளையம் வட்டாரத்துக்குட்பட்ட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆசிரியர் மற்றும் பெற்றோருடன் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் இந்த  நிகழ்வில் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்கள் கடலை  உருண்டை, சிறுதானிய உணவு வகைகள், அடுப்பில்லாமல் உணவு வகை தயார் செய்து பார்வைக்கு வைத்தனர். போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும்  சான்றிதழ் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வை யாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.