கோவையில் அதிகரிக்கும் கொரோனா பூங்காக்களுக்கு செல்ல தடை கோவை, ஜன.15- கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப் படுத்தும் விதமாக நகரில் உள்ள அனைத்து பூங்கா கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் பொதுமக்கள் கூட மாநக ராட்சி தடை விதித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக கோவை மாந கராட்சிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ், பெரியகுளம், வாலாங் குளம், வ.உ.சி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு செல்லவோ, அமர்ந்திருக்கவோ அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். மேலும், நகரின் முக்கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதில், விடுமுறை தினம் என்பதால் சனியன்று பூங் காக்கள் மற்றும் நடைபயிற்சி பகுதிகளில் ஏராளமான பொது மக்கள் காலையிலேயே கூடி இருந்த நிலையில், காவல் துறையினர் அவர்களை ஒலிபெருக்கியின் மூலம் அறி வித்து வெளியேற்றினர். ஞாயிறன்று முழு ஊரடங்கு என்ப தால் விடுமுறையைக் கொண்டாட சனியன்றே பொதுமக்க ளில் பலர் வெளியில் வந்த நிலையில், மாநகராட்சியின் திடீர் உத்திரவினை தொடர்ந்து காவல் துறையினர் பொது மக்களை திருப்பி அனுப்பினர்.