திருப்பூர், மே 11 – திருப்பூரில் நிட் ஜோன் எக்ஸ்போ 2024 என்ற பெயரில் பின் னலாடைத் தொழில் சார்ந்த கண் காட்சி நடத்தப்படுகிறது. வேலன் ஹோட்டல் வளாகத்தில் ஜூன் 14 முதல் 16ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெறு கிறது. இது குறித்து திருப்பூர் வேலன் ஹோட்டல் கண்காட்சி வளாகத் தில் வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிட்ஜோன் அமைப்பின் பங்குதாரர் பரத் மேலும் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடைத் தொழி லுக்குத் தேவையான நவீன இயந்தி ரங்கள், பின்னலாடைத் துணிகள், நூல் மற்றும் இயந்திர உதிரி பாகங் கள் மற்றும் ஆடையில் இடம்பெறக் கூடிய உப பொருட்கள் உள்பட அனைத்து அம்சங்களையும் உள் ளடக்கிய கண்காட்சி திருப்பூரில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டு மின்றி சீனா, ஜெர்மனி, தைவான், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுக ளில் இருந்தும் நவீன இயந்திரங் கள், தொழில்நுட்பங்களைக் காட் சிப்படுத்த உள்ளனர். முற்றிலும் குளிரூட்டப்பட்ட வளாகத்தில் 250 அரங்கங்கள் இடம் பெறுகின்றன. திருப்பூர் மட்டுமின்றி தென்னிந் தியா முழுவதும் இருந்து 25 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த மூன்று நாள் கண்காட்சியை காண வருகை தருவார்கள் என எதிர்பார்க்கி றோம். பின்னலாடை ஏற்றுமதியா ளர்கள், வெளிநாட்டு வர்த்தக நிறுவ னங்கள், வர்த்தக முகவர்கள், உள் நாட்டு பின்னலாடை உற்பத்தியா ளர்கள் என அனைத்துத் தரப்பின ரும் இக்கண்காட்சிக்கு வருவார் கள். பின்னலாடைத் தொழில் தற் போது நலிவடைந்த நிலையில் இருந்தாலும், உலகச் சந்தையில் திருப்பூர் தயாரிப்புக்கு என்று தனி பெயர் உள்ளது. இங்கு தரமான ஆடைகள் தயாரித்து வழங்கப்படு கின்றன. தற்போது போட்டிச் சூழலை சந்திக்க திருப்பூர் தொழில் கட்டமைப்பில் நவீன தொழில்நுட் பங்களைப் பயன்படுத்த வேண்டும். அதற்குரிய வாய்ப்பை இந்த கண் காட்சியில் நாங்கள் ஏற்படுத்தித் தரு கிறோம். நிட்டிங் இயந்திரங்கள், அதிந வீன டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள், தையல் இயந்திரங் கள் காட்சிப்படுத்தப்படுகிறது. அதேபோல் மூன்று வகையான புதிய துணி ரகங்கள் காட்சிப்படுத் தப்பட உள்ளது. இந்த கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம். முதல் முறையாக இக்கண் காட்சி நடத்தப்படும் நிலையில், அடுத்தடுத்து நடத்தப்படும் கண் காட்சிகளில், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் போன்ற அம்சங்களையும், நவீன அம்சங்களையும் கொண்டு வருவ தற்கு ஏற்பாடு செய்வோம் என் றார்.