மே.பாளையம், பிப்.20- பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதி தாக கட்டப்படவுள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா நேரில் சென்று ஆய்வு செய்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் இதன் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டது. நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள போக்கு வரத்து முக்கியதுவம் வாய்ந்த இப்பேருந்து நிலையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங் களில் இருந்தும் பேருந்துகள் வந்து செல் கின்றன. இங்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிய நிலை யில் கட்டிடத்தில் பல இடங்களில் விரி சல்கள் ஏற்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தற்போதுள்ள பேருந்து நிலைய கட்டிடம் மற்றும் கடை களை இடித்து விட்டு புதிய பேருந்து நிலை யம் மற்றும் வணிக வளாகக் கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து, தமிழக அரசு இத்திட்ட பணிக்காக 8.63 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்தது. இப்பணிகள் விரைவில் தொடங் கவுள்ள நிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேருந்து நிலையத் தில் ஆய்வு மேற்கொண்டு, இதற்கான ஏற்பா டுகள் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விசா ரித்தார். இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளை யம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சி 12 ஆவது வார்டுக்கு உட்பட்ட சேரன் நகர் 2 ஆவது பாலம் முதல் பாயப்பனுர் சாலை வரை ரூபாய் 1.70 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி ஆ.ராசா தொடக்கி வைத்தார் முன்னதாக, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சேரன் நகர் பகுதியில் குடிநீர் விநி யோகம் சீராக இல்லை என்றும், ஊராட்சி சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் ஆ. ராசாவிடம் புகார் தெரிவித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உடனடியாக இப் பிரச்சனையின் மீது கவனம் செலுத்தி உரிய தீர்வை எடுக்க வேண்டும் என அதிகாரிகளி டம் கேட்டுக்கொண்டார்.