உதகை,ஜன.7- நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 3 வயது குழந்தை உட்பட 2 பேரை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் ஞாயிறன்று மயக்கஊசி செலுத்தி பிடித்தனர். பந்தலூர் அருகில் கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. காயமடைந்த மூன்று பெண்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், படுகாயம டைந்த சரிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே பகு தியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவர் காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி மக் கள் கடையடைப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுத்தை யைப்பிடிக்க வனத்துறையினர் 6 இடங்களில் கூண்டுகளை அமைத்து கண்காணித்து வந்த னர். இந்நிலையில், சனியன்று பந்த லூர் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சென்ற வடமாநில 3 வயது சிறுமியை, தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண் முன்னே தாக்கி இழுத்துச் சென்றது. பின்பு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சிறுத்தையின் தாக்கு தல் காரணமாக ஏற்கனவே ஒரு பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில், இரண்டாவது உயிரிழப் பும் ஏற்பட்டது. மறியல், கடையடைப்பு; சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தொண்டியாளம் உட்பட 3 பகுதி யில் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும், கூடலூர் தாலுக்காவில் வனத்துறையினரை கண்டித்து கடையடைப்பு போராட் டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இதனால், சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது. சிறுத்தை சுட்டுக்கொல்ல வேண்டும் என மக்கள் வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், சனியன்று காலை கோவை சரக டிஐஜி சரணவசுந்தர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். மக்களி டம் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதி அளித்தார். சிறுத் தையை பிடிக்க முதுமலையிலி ருந்து இரு கும்கிகள் வரவழைக்கப் பட்டது.
இந்நிலையில், ஆம்பரோஸ் என்ற பகுதியில் புதரில் சிறுத்தை பதுங்கி இருப்பது கண்டறியப்பட் டது. முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்கு மார் கும்கியில் அமர்ந்து சிறுத் தைக்கு மயக்க ஊசியை வெற்றி கரமாக செலுத்தினர். இதில் மயக்கமடைந்த சிறுத் தையை வனத்துறையினர் வலையை போட்டு பிடித்து, கூண் டில் அடைந்தனர். சிறுத்தையை அடித்து கொல்ல சில விஷமிகள் திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், பிடிப்பட்ட ஆண் சிறுத்தை வனத்துறையினர் முது மலைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து வண்டலூர் பூங்கா விற்கு எடுத்துச் செல்வதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும் போராட்டக்கா ரர்கள் வனத்துறையினர் உடனடி யாக அந்தப் பகுதியில் உள்ள யானை மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் உயிருக்கும் உட மைக்கும் பாதுகாப்பு வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாசு உள் ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். உயிர்ப்பலி ஏற்பட்டு அச் சத்துடன் வாழும் மக்களுக்கு நம் பிக்கை ஏற்படுத்த வேண்டிய, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அப்பகுதியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.