நீலகிரி, நவ.8- கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால், தடைபட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. இத னால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். கடந்த நவ.3 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக, கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவுகள் ஏற் பட்டன. இதனால், கடந்த 4 ஆம் தேதி மலைரயில் போக்குவரத்து ரத்து செய் யப்பட்டது. இதனையடுத்து ரயில்வே பணியாளர்கள் தண்டவாள பாதையில் சரிந்து கிடந்த மண் சரிவுகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற பகுதி களில் தொடர் மழை காரணமாக பணி கள் தாமதமானதோடு, மேலும் சில இடங்களில் சரிவுகள் ஏற்பட்டன. இத னால் மலைரயில் சேவை அடுத்தடுத்து நவ.5, 6, மற்றும் 7 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர் வாகம் அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந் நிலையில், செவ்வாயன்று மாலை சீர மைப்பு பணிகள் முழுமையாக நிறைவ டைந்ததையடுத்து, புதனன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது. கனமழையால் ஏற்பட்ட மண் சரிவால், தொடர்ச்சியாக 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்த மலைரயில், மீண் டும் இயக்கப்பட்டது சுற்றுலா பயணிக ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.