திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர் நல பல்பொருள் அங்காடி மற்றும் காவலர் முடி திருத்தும் நிலையத்தை கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் (டிஐஜி) செ.விஜயகுமார் வியாழனன்று திறந்து வைத்தார். முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்ற டிஜஜி, ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும், மோப்ப நாய் படைப்பிரிவு அலுவலகத்தையும் ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட காவல் அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட காவலர் உணவு விடுதியையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் அசோசியேசன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.