தருமபுரி, ஜூலை 13- பாலக்கோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவமனையை திறக்கவேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதி பொதுமக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையையேற்று, பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகப் பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகட்டி முடிக்கப் பட்டது. இந்த மருத்துவமனைக்கு 2 ஆண்டுகளாக மருத்துவர் கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாரும் நியமிக்கப்படாத தால் மருத்துவமனை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த மருத்துவமனையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலி யுறுத்தியுள்ளனர்.