கோபி, நவ.19- வடிகால் வசதியின்றி அமைக் கப்பட்ட புதிய தார்சாலை, சில நாட்களிலேயே கனமழையால் சிதலமடைந்தது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கணக்கம்பாளை யம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட சுண்டக்கரடு - கொண்டையம்பாளையம் சாலை, தார்சாலையாக கடந்த மாதம் மேம்படுத்தப்பட்டது. இருபுறமும் வடி கால்கள் அமைக்காமல் சாலை அமைக்கப் பட்டது. இந்நிலையில் சுண்டகரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழையால், தார்சாலை யில் மழை வெள்ளம் தேங்கி, மண் அரிப்பு ஏற் பட்டு சாலை சிதலமடைந்துள்ளது. விபத்து கள் ஏற்படும் முன் இந்த சாலையை சரிசெய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.