திருநெல்வேலி, மார்ச் 30- நெல்லை, பாளை, மேலப் பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டல தலைவர் களுக்கான தேர்தல் புதன் கிழமை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. நெல்லை மாநகராட்சி யில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடந்துள்ளது.இந்நிலையில் நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டல தலைவர்களுக்கான தேர்தல் புதன்கிழமை மாநக ராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது.நெல்லை மாநக ராட்சியில் மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. சார்பாக 43 கவுன்சிலர்களும், அ.தி. மு.க. சார்பாக 4 கவுன்சிலர் களும், காங்கிரஸ் சார்பாக 3 கவுன்சிலர்களும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு கவுன்சிலர்கள் என 4 கவுன்சிலர்களும்,
ஒரு சுயேட்சை கவுன்சில ரும் உள்ளனர்.எனவே 4 மண் டலத்திலும் தி.மு.க. சார்பாக போட்டியிடுபவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து புதன் கிழமை காலை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் தலைமையில், மேயர் சரவ ணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் மண்டல சேர்மன் பதவிக் கான தேர்தல் நடந்தது.இதில் தச்சை மண்டல தலைவராக ரேவதி , பாளை மண்டல தலைவராக பிரான்சிஸ், நெல்லை மண்டல தலைவ ராக மகேஸ்வரி, மேலப்பா ளையம் மண்டல தலைவ ராக கதிஜா இக்லாம் பாசிலா ஆகியோர் வேட்புமனுத்தாக் கல் செய்தனர்.ஆனால் அவர் களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய் யாததால் அவர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டனர்.தொ டர்ந்து அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நெல்லை மாநகராட்சியின் 4 மண்டல தலைவர்களும் வெற்றி சான்றிதழ்களுடன் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றனர்.தேர்த லில் அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும், தி.மு.க. வை சேர்ந்த கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், பிரபாசங்கரி ஆகியோரும் கலந்து கொள்ள வில்லை. ஏனைய 49 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.