ஈரோடு, ஏப்.21- ஒன்றியத்தில் புதிய அரசு அமைய உள்ள தென தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப் பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள் ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட் டில் ஞாயிறன்று, மாவட்டத் தலைவர் ஏ.கே. சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் விக்கி ரமராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற் றினார். இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், மக்களவை தேர்தல் வாக் குப்பதிவிற்கு பின்பு தேர்தல் நடத்தை விதி முறைகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தளர்வுபடுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள்கிறோம். பேர மைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட் டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறை வேற்றி இருக்கிறோம். அவற்றில் வணிகர் தினமான மே 5-ஐ விடுமுறை நாளாக அறி விக்க வேண்டும். பல்வேறு சட்ட விதிகள் குறிப்பாக ஜிஎஸ்டி சட்ட விதிகள், உணவு பாதுகாப்பு சட்ட விதிகள், தொழிலாளர் பாது காப்பு சட்ட விதிகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ள னர். தொழில் வரி, குப்பை வரி, கட்டிட வரை என்று பல்வேறு வரிகளும் கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவை கள் எல்லாம் எதிர்கொள்ளக்கூடிய வகை யில், எப்பொழுதுமே வியாபாரிகள் அடி மைப்பட்டிருக்க கூடாது என்ற வகையில் அடிமை விலங்கை உடைப்பதற்காக “விடு தலை முழக்க மாநாடு” மதுரையில் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதல்வர், கடை உரிமம் முறையை மூன்றாண்டுக்கு ஒருமுறை என்று விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். தில் லியில் புதிய அரசு அமைய இருக்கிறது. அந்த அரசு செவிமடுக்கும் வகையில், மதுரை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்ற உள்ளோம். தமிழ்நாடு அதிக வரி செலுத்தும் இரண்டாவது மாநிலம். சட்டங் களை மதிக்க கூடியவர்களாக நாம் இருக்கி றோம். ஆகவே, நாம் செலுத்தும் வரியில் அதி கமாக ஒன்றிய அரசு கொடுத்தால், தமிழ் நாடு செழிப்பாக இருக்கும். மாநில அரசு கேட் கும் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசு தர வேண்டும், என்றார்.