districts

img

திமுக கூட்டணி வெற்றி பெற உழைப்போம் புதிய திராவிட கழகம் தீர்மானம்

கோபி, டிச.26- நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என  புதிய திராவிட கழகத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடியில் புதிய திராவிட கழகத் தலைவர் ராஜ்கவுண்டரின் பிறந்த நாள் விழா கூட்டம், அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் செளந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினர், பல் வேறு சமூக அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.  இதுகுறித்து ராஜ்கவுண்டர் கூறுகையில், ஜனவரி மாதம் புதிய திராவிட கழகத்தின் சமூகநீதிக்கான 5 ஆவது  மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. மாநாட்டில் முதல்வர், அமைச்சர்களை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க செய்வது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் கல்வி, பொருளாதாரம், வேலை  வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வல் வில் ஓரிக்கு மணி மண்டபம் அமைப்போம் என்கிற வாக்குறு தியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். வருகிற நாடா ளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகு திகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு புதிய திராவிட கழகத்தினர் அயராது உழைத்து வெற் றிக்கு உழைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், இளைஞரணி மாநில துணைச்செயலாளர் கே.இ.பிரகாஷ், சமூக நீதி கட்சி தலைவர் வடிவேல் ராமன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.