திருப்பூர், ஜூலை 27 – மக்கள் தேவைக்கேற்ப புதிய பேருந் துகள் இயக்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலப் பொது மேலாளரிடம் சிஐடியு சங்கத்தினர் கோரிக்கை மனு அளித் தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரந்தர பணி அடிப்படையில் உடனடியாக நிரப்பிட வேண்டும், பொதுமக்கள் தேவைக் கேற்ப புதிய பேருந்துகளை இயக்க வேண்டும், போக்குவரத்து தொழிலா ளர்களுக்கான 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்கிட வேண் டும் என வலியுறுத்தி திருப்பூர் மண்டல அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் வியாழனன்று மதியம் திருப்பூர் மண்டல பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மண்டல அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது. மண்டலத் தலை வர் கந்தசாமி தலைமையில் மண்டல துணைப் பொதுச் செயலாளர்கள் விஸ் வநாதன், கொங்குராஜ், மண்டலப் பொருளாளர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மண்டலப் பொதுச் செயலாளர் செல் லதுரை நிறைவுரை ஆற்றினார். தொழி லாளர்கள் திரளானோர் கலந்து கொண் டனர். துணைத் தலைவர் தேவநேசன் நன்றி கூறினார்.