சேலம் புறநகர் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை துவக்கம்
சேலம், செப்.10- சேலம் கோட்ட புறநகர் வழித்தடத்திற்கு 15 புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் கே.என்.நேரு கொடிய சைத்து துவக்கி வைத்தார் பொதுமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு பழைய பேருந்துகளை மாற்றம் செய்து, அதற்கு பதி லாக புதிய (BS-6) பேருந்துகளாக இயக்க தொடர்ச்சி யாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தற் சமயம் இயங்கி கொண்டிருக்கும் புறநகர் வழித்தட பேருந்துகளுக்கு பதிலாக 15 எண்ணிக்கையிலான புதிய BS-6 வகை புறநகர் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திங்களன்று தொடங்கி வைத்தார். இதில் மேட்டூரிலிருந்து சென்னைக்கு 2 புதிய பேருந்துகளும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச் சிக்கு 2 புதிய பேருந்துகளும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவைக்கு 1 புதிய பேருந்தும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு வழித்தடத்தில் 8 புதிய பேருந்துகளும் என ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் 15 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால், நதியில் கலக்கும் கழிவுநீர்!
தருமபுரி, செப்.10- தருமபுரியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறை யாக செயல்படாததால், நகர பகுதி களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அப்படியே சனத்குமார் நதியில் கலந்து வருகிறதென, அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள னர். தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் அதி கமான மக்கள் வசித்து வருகின்ற னர். நகராட்சியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்க ளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால் வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக் கடை திட்டம் தொடங்கியது. முதற் கட்டமாக 19 வார்டுகளில் பாதாள கழிவுநீர் கால்வாய் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீரை சுத்தி கரிக்க ஒருங்கிணைந்த நகரத்தை ஒட்டியுள்ள மதிகோண்பாளையம் மற் றும் காந்திபாளையத்தில் சுத்திக ரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள் ளது. அதாவது, மதிகோண்பாளை யம் அரூர் பிரிவு சாலையில் பாதாள கழிவுநீர் கால்வாய் திட்ட கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட் டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலை யத்திலிருந்து காந்திபாளையத்தில் உள்ள சுத்தகரிப்பு நிலையத்திற்கு, புதை கால்வாய் வழியாக கழிவு நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திக ரிக்கப்பட்டு அங்கிருந்து சுத்தமான நீரை சனத்குமார் நதியில் கலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், சுத்திகரிப்பு நிலையங் களில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப் படாமல் அப்படியே வெளியேறி வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மழைக்காலங்களில் சேலம் - தருமபுரி நேதாஜி நெடுஞ்சாலை, நெசவாளர் காலனி பகுதியில் இருந்து அதியமான் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி வரை மழைக் காலங்களில் சாக்கடை கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இந்த தண்ணீர் துர்நாற்றத்துடன் சாலை முழுவதும் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிக ளும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். இதனால் ஏற்படும் நோய்த்தொற் றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, 19 வார்டுகளிலிருந்து பாதாள சாக்கடை புதை கால்வாய் வழியாக மதிகோண்பாளையம் அருகே உள்ள சுத்திகரிப்பு நிலை யத்திற்கு செல்லாமல் சனத்குமார் நதியில் அப்படியே வெளியேறி துர் நாற்றம் வீசி வருகிறது. மேலும், காந்திபாளையத்தில் உள்ள சுத்திக ரிப்பு நிலையமும் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. ஏற்க னவே அமைக்கப்பட்ட பாதாள சாக் கடை திட்டம் முழுமையாக செயல் படாத நிலையில், மீதமுள்ள 14 வார்டு களிலும் வங்கி கடன் உதவியுடன் பாதாள சாக்கடை திட்டத்தை செயல் படுத்த கடந்த ஆக.29 ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை புதை கால்வா யில் அவ்வப்போது அடைப்பு ஏற் பட்டு, கழிவுநீர் வெளியேறி, துர்நாற் றத்தால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஏற்கனவே 19 வார்டுக ளில் அமைக்கப்பட்ட பாதாள கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்த பிறகு, மீதமுள்ள வார்டுகளில் பாதாள கழிவு நீர் கால்வாய் திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும். மேலும், கழிவுநீர் சுத் திகரிப்பு நிலையங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என தரும புரி நகர மக்கள் வலியுறுத்தியுள்ள னர்.
இரண்டாவது சீசனுக்கு தயாராகும் உதகை தாவரவியல் பூங்கா
உதகை, செப்.10- உதகையில் 2 ஆவது சீசன் துவங்கி யுள்ள நிலையில், செப்.20 ஆம் தேதிக்கு மேல் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் மேற்கொள்ள தோட்டக் கலைத்துறை முடிவு செய்துள்ளது. நீலகிரியில் செப்டம்பர் மற்றும் அக் டோபர் மாதம் வரை 2 ஆவது சீசனாக கடைபிடிக்கப்படுகிறது. 2 ஆவது சீசன் துவங்கியுள்ள நிலையில் அனைத்து விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் கட்ட ணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 2 ஆவது சீசனுக்காக, உதகையில் உள்ள தாவர வியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா போன்ற பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்காவில் உள்ள ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் பூத் துள்ளன. இதேபோல், தொட்டிகளிலும் ஒரு சில மலர்கள் மட்டுமே பூத்துள் ளன. கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயில் காரணத்தால், பூங்காவில் வைக் கப்பட்டுள்ள மலர் செடிகளில் தற்போது மொட்டுக்களே காணப்படுகின்றன. செப்.20 ஆம் தேதிக்கு மேல் மலர் அலங் காரங்கள் மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே, காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாட உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை காண வாய்ப்புள் ளது.
மலைப்பாதை தடுப்புச்சுவரை இடித்து நின்ற தனியார் பேருந்து
சேலம், செப்.10- ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தவர்க ளின் பேருந்து ஒன்று, கீழே இறங்கும் போது மலைப்பாதையின் 14 ஆவது கொண்டை ஊசி வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா விடு முறையையொட்டி வெளிமாநிலம், மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சேலம் மாவட்டம், ஏற்காட் டிற்கு படையெடுத்தனர். சென்னையில் இருந்து ஏற்காட்டை சுற்றிப்பார்க்க குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண் கள் என 40 பேர் தனியார் பேருந்தில் வந் தனர். இந்த பேருந்தை முருகேசன் (51) என்பவர் ஓட்டிவந்தார். இதன்பின் பல் வேறு இடங்களை சுற்றி பார்த்தப்பின், திங்களன்று மாலை சென்னை செல்வ தற்காக புறப்பட்டனர். ஏற்காடு மலைப் பாதையில், 14 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. வளைவில் திரும்பிய பேருந்து, நேராக பள்ளத்தை நோக்கி சென்ற நிலையில், கொண்டை ஊசி வளைவில் இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி நின்றது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 40 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏற்காடு காவல் துறையினர் மற் றும் அவ்வழியாக வாகனங்களில் சென் றவர்கள், காயமடைந்தவர்களை மீட்ட னர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத் துக்கான காரணம் குறித்து, ஓட்டுநர் முருகேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியிடம் தகறாரில் ஈடுபட்ட சமூக விரோதி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
திருப்பூர், செப். 10 - தாராபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டி ருந்த 10ஆம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாகப் பேசி தகறாறு சமூக விரோதி மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. தாராபுரம் வட்டம் சூரியநல்லூர் ஊராட்சி இடையன்கி ணறு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனியார் பனியன் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்புப் படித்து வருகிறார். திங்களன்று பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, பல பேர் முன்னிலையில் சமூக விரோதி ஒருவர், அவரது கையைப் பிடித்துக் கொண்டு, நீ என்னை காதலிக்கிறாயா, இல்லையா என்று ஆபாசமாகப் பேசி தகராறு செய்திருக்கிறார். இது குறித்து தகவல் பேரில். அங்கிருந்து காவலர் ஒருவர் வந்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்துக் கொண்டு காவல் நிலையத் திற்கு அழைத்துச் சென்று பெயர், தொலைபேசி விபரங்களை எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர். இதனால் மாணவி உள்ளிட்டோர், மீண்டும் பள்ளி விடும் சமயம் அந்த நபர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து தகராறு செய்யக்கூடும் என அஞ்சுகின்றனர். இது குறித்து தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மாணவியின் தந்தை புகார் மனுக் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கிறார். துணைக் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். அந்த மாணவிக்கு நடை பெற்ற அநீதிக்கு எதிராக காவல் துறை உரிய முறையில் சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபு ரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் கேட்டுக் கொண்டிருக் கிறார்.
நிலக்கடலை ஏலம்
அவிநாசி செப்.10- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.6,250 முதல் ரூ.6,650 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.5,900 முதல் ரூ.6,200 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.5,500 முதல் ரூ.5,900 ஏலம் போனது. மொத்தம் ரூ.2.15 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.
வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு கூட்டம்
உடுமலை, செப்.10- உடுமலையில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. திருப்பூர் மாவட்டம், 125 உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் 126 மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக் கான வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு செய்வது தொடர் பாக செவ்வாயன்று உடுமலைப்பேட்டை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஜலஜா தலை மையில் மடத்துக்குளம் வட்டாட்சியர் பானுமதி, உடுமலைப் பேட்டை துணை வட்டாட்சியர் (தேர்தல்) சையது ராபியம் மாள் மடத்துக்குளம் துணை வட்டாட்சியர் (தேர்தல்) வளர்மதி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வாக் குச்சாவடி நிலையம் இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பிரி வுகள் மாற்றம் மற்றும் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடி பிரிப்பது, வாக்கு சாவடி நிலையம் பெயர் மாற்றம் ஆகியன தொடர்பாக இரு சட்டமன்ற தொகுதி களிலும் மாற்றம் செய்வது குறித்து கலந்தாலோசனை செய் யப்பட்டது.
பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், செப்.10 - பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவம னையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட் பட்ட கிளை மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட் பட்ட கட்சி கிளை மாநாடுகள் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 1 மற்றும் 8 ஆகிய தேதிக ளில் நடைபெற்றன. இந்த மாநாடுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், ஆர். மைதிலி, வே.தூயவன், ஆ.சிகாமணி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாடுகளில் தேர்ந்தெடுக் கப்பட்ட கிளைச்செயலாளர்கள் வருமாறு: பெருமாநல்லூர் ஏ - ஜி.சண்முகம், பெருமாநல்லூர் பி - எம்.கே.கோவிந்த சாமி, பெருமாநல்லூர் சி - தேவராஜ், ஈட் டிவீரம்பாளையம் - கே.சுப்பிரமணி, கணக்கம்பாளையம் (வடக்கு) - ஜெ. செல்வநாதன், கணக்கம்பாளையம் - எம்.வெள்ளியங்கிரி, காளிபாளையம் - கே.பட்டுச்சாமி, பள்ளிபாளையம் - பி.சுரேஷ்குமார், காளம்பாளையம் - விஸ்வநாதன், ஏவிபி லேஅவுட் - பி. நரேந்திர பிரசாத், அவனாசிகவுண்டம் பாளையம் - பி.கதிர்வேல், அவினாசிக வுண்டம்பாளையம் மாதர் - கே.வசந்தி, ஏ.எஸ்.எம் காலனி - எஸ்.ராஜேஷ், அங் கேரிபாளையம் - என்.மனோகர், வெங் கமேடு ஏ - எம்.எஸ்.வேலுசாமி, ஆத்துப் பாளையம் - டி.அய்யாசாமி, ஆத்துப்பா ளையம் மாதர் - ஏ.கீதாலட்சுமி, செட்டி பாளையம் - டி.கமலக்கண்ணன், விஜய புரி கார்டன் - எம்.மனோகர், பாண்டியன் நகர் கட்டுமானம் - சுப்பிரமணி, குருவா யூரப்பன் நகர் (போ) மாதர் - கே.எஸ்.கற் பகம், தோட்டத்துபாளையம் - இ.மங்க லட்சுமி, தோட்டத்துபாளையம் (மாதர்) - சுமதி, சமத்துவபுரம் - சி.பிரான்சிஸ், வாவிபாளையம் - ஆர்.சுப்பிரமணி, குரு வாயூரப்பன் நகர் (சே) - எம்.சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். இந்த மாநாடுகளில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: சமத்து வபுரம் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று வருடங்களுக்கு மொத்தமாக வரி வசூல் செய்வதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை நிர் வாகம், புதிய பஸ் நிலையம் முதல் பெருமாநல்லூர் வரை பழுது அடைந் துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். வடக்கு ஒன்றிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்க ளில் குடியிருக்கும் மக்களுக்கு இல வச வீட்டு மனை பட்டா வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட அந்தந்த பகுதி கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டன. வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர். காளியப்பன் இத்தகவலை தெரிவித்தார்.
சாலை மற்றும் சாக்கடை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தித்தர சிபிஎம் கோரிக்கை
அவிநாசி, செப்.10- அவிநாசி சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடை பெறாமல் இருக்கும் சாக்கடை மற்றும் சாலைப் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என சிபிஎம் கிளை மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவிநாசி ஒன்றிய பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் புதிய கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அனைப்புதூர் கிளைச் செயலாளர் பாண்டி யன், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண் டம்பாளையம் செயலாளராக தினகரன், போத்தம்பாளையம் செயலாளராக வேலுச் சாமி, கானூர்புதூர் செயலாளராக ஜீவா னந்தம், பச்சாம்பாளையம் செயலாளராக பழ னிச்சாமி, கருவலூர் செயலாளராக அருண், புளக் காட்டுபாளையம் செயலாளராக சுப்ரம ணியன், காட்டுவளவு செயலாளராக தங்க ராசு, காட்டுவளவு மாதர் கிளை செயலாளராக கோமதி, பெரியாயிபாளையம் கிளைச் செயலாளராக ராமன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கிளை மாநாடுகளில் அவிநாசி சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு சாலை மற்றும் சாக்கடை அமைக் கும் பணிகள் தொடங்காமல் உள்ளதை உடன டியாக தொடங்க வேண்டும். அவிநாசி பேரூ ராட்சிக்கு உட்பட்ட பாலச்சந்தர் மருத்துவம னையில் முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவ லகம் வரை சாலை விரிவாக்கம் செய்ய வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனி சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்மு கம், பாலசுப்பிரமணியம், ராஜன், காமராஜ், வையாபுரி, கருப்புசாமி, பழனிசாமி, குமார சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நடைபெற்ற கிளை மாநாடுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் ஏற் றப்பட்டது. கருவலூர் கிளை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி யினை, கட்சியின் முன்னாள் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ராஜூ ஏற்றினார்.
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் தொடக்கம்
திருப்பூர், செப். 10 – திருப்பூர் மாநகராட்சி சிக் கண்ணா அரசு கலைக்கல்லூ ரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் தொடக்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திற னாளிகள், பொதுமக்கள் மற் றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டு கள் 53 வகைகளில் நடத்தப் படுகிறது. செப்.10 அன்று கேரம் விளையாட்டுப் பேட்டி யில் தொடங்கி செப். 24ஆம் தேதி வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.விளை யாட்டுப் போட்டிகள் அனைத் தும் காலை 7.00 மணி அள வில் துவங்கப்பட உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளலாம். நேரடி யாக பதிவு செய்யும் முறை கிடையாது. போட்டி நடை பெறும் பொழுது விளை யாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், மாற்றுத் திறனாளிகள் மாற் றுத்திறனாளி துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அரசுப் பணியாளர் கள் அரசு துறையால் வழங் கப்பட்ட அடையாள அட்டை, பொதுப்பிரிவுக்கு இருப்பி டச் சான்றிதழ் உள்ளிட்ட விப ரங்களின் நகல்களை போட்டி நடைபெறும்போது சமர்ப் பிக்க வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம் திருப்பூர் மாவட்ட விளை யாட்டு அலுவலகத்தினை 0421-2244899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தெரிவித்துள்ளார்.
மணக்கடவில் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை
திருப்பூர், செப். 10 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செவ்வாயன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை யின் மூலம் நிலமெடுப்பு செய்து 288 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தமிழ்நிலம் மென்பொருளில் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளை இணைய வழி பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளை இனம் கண்டறிய இயலாத நிலை ஏற் பட்டால், பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதன்படி 69 பயனாளிகளை இனம் கண்ட றிய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் பட்டாவி லுள்ள நிபந்தனையை மீறியுள்ளதால் வழங்கப்பட்ட பட் டாவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கு உரிய விளக் கத்தை 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமோ திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அல்லது மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.