போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல் சேலம், அக்.18- தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளார்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும் என சிஐடியு போக்குவரத் துக்கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க சேலம் மண்டல 35 ஆவது ஆண்டு பேரவை சேலம் புதிய பேருந்து நிலையம் சிஐடியு அலுவலகத்தில், மண்டல தலைவர் கே.செம்பன் தலைமையில் நடைபெற் றது. எம்.குணசேகரன் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதய குமார் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக் கையை பொதுச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் எம்.சேகர் ஆகியோர் சமர்பித்தனர். சிஐ டியு சாலை போக்குவரத்து சம்மே ளன மாநில துணைத்தலைவர் எஸ். கே.தியாகராஜன், துணைத் தலைவர் எஸ்.சண்முகம், மாவட்டப் பொருளா ளர் வி.இளங்கோ ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இதில், 15 ஆவது ஊதிய ஒப்பந் தத்தை விரைந்து பேசி முடித்திட வேண்டும். அநியாய தண்டனையை தடுத்திட வேண்டும், விடுப்பு மறுத்து சம்பளம் வெட்டுவதை தடுத்திட வேண்டும். வரவுக்கும் செலவுக்கு மான வித்தியாச தொகையை அரசே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவையை நிறைவு செய்து சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார் சிறப்புரையாற்றி னார். முடிவில், சம்மேளனக்குழு உறுப் பினர் பி. முருகன் நன்றி கூறினார். இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்க ளைச் சேர்ந்த போக்குவரத்து தொழி லாளர்கள் திரளானோர் பங்கேற்ற னர். திருப்பூர் இதேபோன்று, அரசுப் போக்கு வரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 2022 – 23 ஆம் ஆண்டு பெற்ற ஊதி யத்தில் 25 சதவிகிதம் போனஸ் வழங் கக்கோரி காங்கேயம் அரசுப் பேருந்து பணிமனை முன்பாக சிஐடியு போக் குவரத்து கழக சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், கிளை துணைத் தலை வர் காளிராஜ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். முடிவில், முத்துக்குமார் நன்றி கூறினார்.