ராசிபுரத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு நிலையம் திறப்பு
நாமக்கல், ஜன.24- ராசிபுரத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு நிலை யம் துவங்கப்பட்டுள்ளதாகவும், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளுக்கு சிஎன்ஜி வழங்கும் திட்டம் ஏப் ரல் மாதம் துவங்க உள்ளதாகவும் ஐஆர்எம் நிலைய மேலா ளர் அறிவழகன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்றார்போல், தற்போது நான்கு சக்கர வாகனங்கள் பயோ கேஸ், சிஎன்ஜி உள்ளிட்ட இயற்கை எரிவாயுகள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆண்டக ளுர்கேட் பகுதியில் முதல்முறையாக இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், ஐஆர்எம் நிலைய மேலாளர் அறிவழ கன், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அறிவழகன் கூறுகையில், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் தற்போது 25 சதவிகித நிலையங்கள் திறக் கப்பட்டுள்ளன. இந்த வருடத்திற்குள் 100 சதவிகித சிஎன்ஜி எரிவாயு நிலையங்கள் திறக்கப்படும். ஏற்கனவே நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் 8 சிஎன்ஜி எரிவாயு நிலை யம் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 262 சிஎன்ஜி எரிவாயு நிலையங்களில் இருந்து, ஒவ்வொரு வீட் டிற்கும் தனித்தனியாக இணைப்புகள் கொடுப்பதற்கான பணி கள் நடந்து வருகின்றன. சிஎன்ஜி எரிவாயு வாகனங்களுக்கு குறைந்த விலையில் அதிக மைலேஜ் தருவதால் வாகன பயன்பாட்டாளர்களுக்கு இது பொருட்செலவை மிச்சப்படுத் தும். வீடுகளில் சிஎன்ஜி இணைப்புகள் கொடுக்கப்படும் நிலை யில், தீ விபத்துகள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், 50 சதவிகிதம் பணம் மிச்சப்படுத்தப்படும். மேலும், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளுக்கு சிஎன்ஜி இணைப்பு வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என அறிவழகன் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம்
நாமக்கல், ஜன.24- தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் அரசு சலுகைகள் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பள்ளிபாளையத்தில் ஜன.27 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம் வரும் ஜன.27 ஆம் தேதியன்று பள்ளிபாளையம் ஜிவி மகாலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கையினை மாவட்ட ஆட்சியர் மேற் கொண்டுள்ளார். தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, அரசு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங் கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.52 கோடி மதிப்பீட்டில் 3 ஏரிகள் புனரமைப்பு பணிகள்
சேலம், ஜன.24- சேலத்தில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 3 ஏரிகள் புனரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறதென மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் தெரிவித்துள் ளார். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட போடி நாயக்கன்பட்டி ஏரியை புனரமைத்து அழகுபடுத்தும் பணி மற்றும் சூரமங்க லம் ரெட்டியூர் மாரியம்மன் கோவிலி லிருந்து குரங்குச்சாவடி சந்தைக்குச் செல்லும் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் சீ.பாலச் சந்தர் கூறுகையில், சேலத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வாரி, நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அந்த வகையில், சேலம் மாநக ராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய நீர்நிலைகளில் ரூ.52 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் தற் போது சராசரியாக 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளன. போடிநாயக்கன் பட்டி ஏரியானது பழைய சூரமங்கலம் கிராமம் மற்றும் ஜே.ஜே.நகர் ஆகிய பகு திகளை உள்ளடக்கி 20.25 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. போடி நாயக்கன்பட்டி ஏரியை புனரமைத்து அழகுபடுத்துவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.19 கோடி தமிழக அரசால் வழங்கப்பட் டுள்ளது, என்றார். மேலும், பொதுமக்களின் அடிப்ப டைத் தேவைகளில் ஒன்றான சாலை வச தியை மேம்படுத்தும் வகையில் சேலம் மாநகராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், 123.496 கி.மீ. நீளத்துக்கு ரூ.59.13 கோடி மதிப்பீட்டில் 759 எண்ணிக்கையிலான சாலை மறுசீரமைப்புப் பணிகளும், நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் 55 கி.மீ. நீளத்துக்கு ரூ.18.84 கோடி மதிப்பீட்டில் 346 எண்ணிக்கையிலான சேதமடைந்த சாலைகள் மறுசீரமைப் புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள் ளன. மேலும், மாநில நிதிக்குழு மானி யத்தின் கீழ் ரூ.25.37 கோடி மதிப்பீட் டில் 427 சாலைகள் 48.184 கி.மீ. நீளத் திற்கு மறுசீரமைப்புப் பணிகளும், 15 ஆவது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.26.79 கோடி மதிப்பீட்டில் 372 சாலைகள் 59.057 கி.மீ. நீளத்துக்கு மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. அந்த வகையில், ரெட்டி யூர் மாரியம்மன் கோயிலிலிருந்து குரங்குச்சாவடி சந்தைக்குச் செல்லும் சாலை சீரமைப்புப்பணி ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது, என்றார்.
காவிரியாற்றில் சாய கழிவுநீர் கலப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஜன.24- பள்ளிபாளைம் காவிரியாற்றில் சாய கழிவுநீர் கலப்பதை கண்டித்து, அப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற சாயத்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் இரவு நேரங்களில் காவிரியாற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் நேரடியாக காவி ரியாற்றில் கழிவுநீரை கலந்து வருகின்றன. இதனால் குடிநீர் மாசு ஏற்படுவதுடன் தொற்று நோய்கள் பரவி வருகின்றது. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், குமார பாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடமும் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், லோக் ஜன சக்தி கட்சியின் சார்பில், ஆவத்தி பாளையம் பகுதியில் பறையடிக்கும் போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப் பாட்டமாக நடைபெற்றது. அப்பொழுது, கழிவுநீர் காவிரி யாற்றில் கலப்பதை அதிகாரிகள் தடுக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாநில அளவிலான சிலம்பம் போட்டி மாங்கரை அரசு பள்ளி மாணவர் முதலிடம்
பென்னாகரம், ஜன.24- ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசு பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. கடந்த ஜன.19 முதல் 22 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான 30 கிலோ பிரிவில் தருமபுரி மாவட்டம், மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் ஹரிஷ் ராகவ் கலந்து கொண்டு, முதலிடம் பெற்றார். அதேபோல் 17 வயதுக்கான பிரிவில் மாணவி வீரமணி வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வம், முனுசாமி, உடற்கல்வி ஆசிரியர் குப்பா கவுண்டர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கழிவுகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சேலம், ஜன.24- சேலம் - ஆத்தூர் சாலை பகுதியிலுள்ள அயோத்தியாப்பட்டணத்தில் கோழி, குப்பைக்கழிவுகளை எரிப்பதால், சாலை முழுக்க புகை மண்டலமாக மாறியது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கிழக்குப்புறமாக சேலம் - ஆத்தூர் சாலை உள்ளது. இச்சாலை வழியாக சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, ஆத்தூர் மற்றும் அயோத்தியாப்பட்டணத்தை கடந்து வேலூர், திருப்பத்தூர், அரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட பல ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதைத்தவிர வாழப்பாடி, பேளூர், ஆச்சாங்குட்டப்பட்டி, கூட்டாத்துப்பட்டி, கோம்பூர் உள்பட பல ஊர்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வழியாக தினசரி 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகிறது. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சேலம் -ஆத்தூர் சாலையில், அயோத்தியாப்பட்டணம் அருகே சிலர் கோழி, குப்பைக்கழிவுகளை கொட்டி தீவைத்துவிட்டு செல்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் புகை சாலை முழுவதையும் மறைத்து கொள்கிறது. மேலும், அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் புகையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரம் கோழி, குப்பைக்கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு
திருப்பூர், ஜன.24- கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.3.91 கோடி மதிப் பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் புதனன்று துவக்கி வைத்தார். திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட் சியில் நமக்கு நாமே திட்டம், உட்கட்டமைப்பு வசதிகள் நிதி திட்டம், 15 ஆவது நிதிக்குழு மானியத் திட்டம் மற்றும் ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதனன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி நாத், உதவி பொறியாளர் கற்பகம், கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
விடுமுறை நாட்களிலும் வரி வசூல் மாநகராட்சி ஆணையர் தகவல்
திருப்பூர், ஜன. 24 - திருப்பூர் மாநகராட்சியில் தைப்பூசம் அரசு விடுமுறை தின மான வியாழக்கிழமையும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என்று மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் கூறி யுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் புதன்கி ழமை விடுத்துள்ள செய்தியறிக்கையில் கூறியிருப்பதாவது: சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்ட ணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவை வசூலிக்க, ஜன. 25 வியாழனன்று வரி வசூல் மையங்கள் வழக்கம்போல செயல்படும். மேலும், பிப்ரவரி 2024 வரையிலான அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெ ரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முரு கம்பாளையம், ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பண மாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்ட ணங்கள் செலுத்தலாம் என்றும் ஆணையர் கூறியுள்ளார். htt ps://tnurbanepay.tn.gov.in இணையம் மூலமும் பொது மக்கள் தங்களது வரி மற்றும் கட்டண நிலுவைகளை உடன் செலுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
குடியரசு தின விழா
திருப்பூர், ஜன.24- திருப்பூர் மாவட்ட நிர்வா கம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதா னத்தில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வா கம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதா னத்தில் குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி காலை 8.50 மணியளவில் நடைபெறு கிறது. ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தேசியக் கொடியை ஏற் றிவைத்து காவல் துறையி னரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொள்கிறார். இதைத்தொடர்ந்து, சுதந்தி ரப் போராட்ட தியாகிகள் மற் றும் அவர்களது வாரிசுக ளைக் கெளரவித்து, சிறந்த காவலர்களுக்கு பதக்கம் மற் றும் அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வழங்குகிறார்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது
கோவை, ஜன.24- கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகராட்சி 30 ஆவது வார்டு திமுக கவுன்சில ராக இருப்பவர் சரண்யா. இவரது கணவர் செந்தில்குமார், அவரது தம்பி ரவிக்குமார் ஆகியோர் கணபதி ராஜவீதி, பஜனை கோவில் தெருவில் சூதாட்ட விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீ சார் கணபதி பகுதியில் திடீர் சோதனையை மேற்கொண்ட னர். அப்போது அங்கு 25 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, அங்கிருந்து சுமார் 12லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 25 நபர்களை யும் கைது செய்தனர். 20 பேர் காவல்நிலைய பிணையில் விடு விக்கப்பட்ட நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சூதாட்ட விடுதியை நடத்தி வந்து தற்போது தலை மறைவாக உள்ள கவுன்சிலரின் கணவர் செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர் ஆளும் கட்சி கவுன்சிலரின் கண வர் சட்டவிரோதமாக சூதாட்ட விடுதி நடத்தி வந்தது அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
துடைப்பம் செய்யும் வியாபாரி வீட்டில் தீ விபத்து
கோவை, ஜன.24- சூலூரில் துடைப்பம் செய்யும் வியாபாரி வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் கிருஷ்ணராயப்ப தேவர் வீதி யில் குடியிருந்து வருபவர் விஸ்வநாதன். அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் இருந்து ஓலைகளை எடுத்து வந்து துடைப்பம் செய்து விற்பனை செய்து வருகிறார்.இதற்காக இவரது வீட்டில் உரித்த துடைப்பம் மற்றும் காய்ந்த தென்னை ஓலைகள் அதிக அளவில் குவித்து வைத்திருந் தார். இந்நிலையில் திங்களன்று இரவு அவரது வீட்டில் எதிர் பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வீடு மற்றும் வீட்டில் வைத்திருந்த ஓலைகள், துடைப்பம் ஆகி யவற்றில் தீ பரவி பயங்கரமாக எரிந்தது. அருகில் இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. உடனே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணை ப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்த வீடு மிகவும் குறுகளான வழிப்பாதையில் அமைந்திருந்த தால், சுமார் 1000 அடி நீளத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் குழாய்களை வைத்து தீயை அணைத்தனர். திடீர் தீ விபத் தில் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால், அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரியில் 5,73,624 வாக்காளர்கள்
நீலகிரி, ஜன.24- நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5,73,624 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.அருணா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அந்த வகையில், உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று தொகுதி களிலும் ஆண் வாக்காளர்கள் 2,74,497 பேர், பெண் வாக்கா ளர்கள் 2,99,107 பேர், மாற்று பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 5,73,624 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டி யலுக்குப் பின் நடைபெற்ற பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து 14,360 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், 11,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் உள்ள னர். அக்டோபரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டி யலுடன் ஒப்பிடும்போது, இறுதி வாக்காளர் பட்டியலில் 2,992 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கோவை, ஜன.24- தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார இறுதி நாள் களை முன்னிட்டு, கோவையில் இருந்து வெளியூர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மருதமலை, பழனி, திருவண்ணாமலை, திருச் செந்தூர், மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லவும், மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கெ னவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடு தலாக 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
நீலகிரி, ஜன.24- உதகை அருகே உள்ள அறையட்டி கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் அதிக வனப்பகு தியை கொண்டுள்ளதால், அங்கு வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், வனவிலங்குகள் தண் ணீர் மற்றும் உணவைத்தேடி அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம். இந்த நிலை யில், கடந்த ஒரு மாதமாக குன்னூர் பகுதி யில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் ஒரு வழியாக இடம் மாறி, உதகை அருகே உள்ள அறையட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளது. குடியிருப்புகளின் அருகே உலா வந்த காட்டு யானைகள், புதனன்று விவசாய நிலங்க ளில் புகுந்து காய்கறிகளை சேதப்படுத்தி யது. இதனை கண்டு அச்சமடைந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குந்தா மற்றும் குன்னூர் பகுதி வனத்துறையினர், யானைகளை வனப்பகுதியில் விரட்டினர். யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப் பட்டு விட்டாலும், பொதுமக்கள் கவனமு டன் இருக்க வேண்டும் எனவும், காட்டு யானைகள் மீண்டும் வந்தால் வனத்து றைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
சிங்காநல்லூரில் போலி மருத்துவர் கைது
கோவை, ஜன.24- சிங்காநல்லூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்து வம் பார்த்து வந்த போலி மருத்து வரை, போலீசார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூர் நீலிகோ ணம்பாளையம் பகுதியில் ஜோதி கிளி னிக் என்ற பெயரில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தக வல் கிடைத்தது. இதனையடுத்து மருத் துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர், அந்த கிளினிக்கு சென்றனர். இணை இயக் குனரின் ஓட்டுநரை நோயாளி போல் தேவராஜிடம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விட்டு அவரை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். தேவராஜுக்கு பல்ஸ், டெம்பரேச்சர் போன்றவை பார்த்துவிட்டு ஊசி போட இருந்த நிலையில், இணை இயக்குனர் ராஜ சேகரன் தலைமையிலான குழுவினர் அவரை பிடித்தனர். பின்னர் அவரது ஆவணங்களை சரி பார்த்தபோது, அவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது தெரியவந்தது. மருந்து கடையில் முத லில் வேலை பார்த்து வந்ததும், பின்னர் அந்த அனுபவத்தை வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்க்க ஆரம் பித்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நீலிகோணம் பாளையம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்ததும் விசாரணையில் அம்ப லமானது. இதனையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப் பட்டு, போலி மருத்துவர் தேவராஜை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, போலி மருத்துவர் தேவ ராஜை கைது செய்த சிங்காநல்லூர் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவராஜ் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சுகாதாரத் துறை அதி காரிகள் சீல் வைத்தனர்.
போலீசாரிடம் ஓட்டுநர் வாக்குவாதம்
கோவை, ஜன.24- கோவை, சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த வர் கெளதம். மினி ட்ரக் ஓட்டுநரான இவர், சம்பவத்தன்று இரவு மினி ட்ரக்கில் சிந்தாமணிபுதூரில் இருந்து சூலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பம்பட்டிபிரிவில் நின்று கொண்டு இருந்த கார் மீது ட்ரக் லேசாக உரசி உள் ளது. இதனைப்பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் மினி ட்ரக்கை வழிமறித்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது கௌ தம் போதையில் வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து இளைஞர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சூலூர் போலீசார் கௌதமை விசாரித்தனர். அப்போது, வாக்குவா தத்தில் ஈடுபட்ட கௌதம், தான் குடிக்கவில்லை என கூறி அலப் பறையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சூலூர் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற னர். இந்நிலை கௌதம் அலப்பறை செய்த வீடியோ வைர லாகி வருகிறது.
டிராக்டர் பேரணியில் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
கோவை, ஜன.24- வருகின்ற ஜன. 26 ஆம் தேதியன்று நடை பெற உள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணி யில் மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் செவ்வாயன்று, கோவை காட்டூரில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி அலு வலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடை பெற்றது. இதில் எல்.பி.எஃப். ஆனந்த், வணங்காமுடி, ஐ.என்.டி.யு.சி பி.சண்முகம், ஏ.ஐ.டி.யு.சி. சி.தங்கவேல், கே.எம்.செல்வ ராஜ், எச்.எம்.எஸ். ஜி.மனோகரன், சி.ஐ.டி.யு கே.மனோகரன், கே.ரத்தினகுமார், எம்.எல்.எப். மு.தியாகராஜன், வி.சரவணகுமார், ஏ.ஐ.சி.சி.டி.யு க.பாலசுப்ரமணியம், எஸ்.டி.டி.யு ரகுபு நிஸ்தார் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில், ஐக்கிய விவ சாயிகள் முன்னணியினர் விடுத்த அழைப் பினை ஏற்று, கோவை மாவட்ட விவசாயி கள் கூட்டமைப்பினர் வருகின்ற ஜன. 26 ஆம் தேதியன்று கோவையில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேரணி யில், மத்திய தொழிற்சங்கங்கள் கலந்து கொள்வது. 44 தொழிலாளர் நல சட்டங் களை முதலாளிகளுக்கு ஆதரவாக நான்கு சட்டங்களாக திருத்தியதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். மின்சார திருத்த மசோதா 2022 திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாக்கு வதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட விவசாயிகள், தொழிலாளர்களின் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து வது என தீர்மானிக்கப்பட்டது.
ஜன.30 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஈரோடு, ஜன. 24- ஈரோடு மாவட்டத்தில் ஜன. 30ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக் கையில், ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதத்தின் இறுதி வெள்ளியன்று நடைபெறும். இம் மாதம் இறுதி வெள்ளி குடியரசு தினம் என்பதால், ஜனவரி மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் செவ்வா யன்று நடைபெறும். கூட்டத்தில் காலை 10 மணி முதல் மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் விவசாய சங்கப் பிரதிநிதி கள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். எனவே இக்கூட்டத்தில் விவ சாயப் பெருமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவி கொலை வழக்கு: கணவனுக்கு ஆயுள் தண்டனை
கோவை, ஜன.24- மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளி யான கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் நாயக் (33). இவர், கடந்த 2021-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத் தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ் வழக்கின் விசாரணை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கின் விசா ரணை திங்களன்று முடிவு பெற்று, குற்றவாளி சுதர்சன் நாயக் கிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறை யில் புலன்விசாரணை மேற்கொண்ட அதிகாரி மற்றும் சாட்சி களை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதி மன்ற முதல் நிலைக் காவலர் ஆகியோருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டு களை தெரிவித்தார்.
மின் வசதி செய்து தரக்கோரி முறையீடு
ஈரோடு, ஜன. 24- காஞ்சிகோவில் அருகே அன்னை சத்தியா நகர் பகுதியில் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், காஞ்சிகோவில் அருகே அன்னை சத்தியா நகர் உள்ளது. இப்பகுதியினர், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கிய மனு வில் கூறியிருப்பதாவது, காஞ்சிகோவில், அன்னை சத்தியா நகரில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். நாங் கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். இப்பகுதி யில் சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் இல்லை. தங் கள் வீடுகளில் படிக்கும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில், எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு கோரி முறையிட்டால் ரூ.14 ஆயிரத்து 500 செலுத்தும்படி கேட்கின்றனர். அவ்வளவு தொகையை மொத்தமாக எங்களால் செலுத்த இயல வில்லை. வீட்டில் மின்சாரம் இல்லாததால், இரவில் வீட்டுக் குள் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வந்துவிடுகின்றன. எனவே தங்கள் பகுதிக்கு மின்சார வசதி செய்து தர ஆவ ணம் செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுவதாக, அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ரூ.1.99 கோடியில் பாலம் கட்டும் பணி தீவிரம்
உதகை, ஜன.24- நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு வழி யாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தெப்ப காட்டிலிருந்து மசினகுடி வழியாக உத கைக்கு கல்லட்டி மலைப்பாதை செல்கிறது. மைசூரிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், கூடலூர் சென்று உதகை வருவதை காட்டிலும், மசின குடி வழியாக உதகைக்கு செல்வது மிகவும் சுலபம் மற்றும் பயணநேரம் குறையும். இத னால் உதகை நோக்கி வருபவர்கள் இச்சா லையை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரம் அபாயகரமான சாலை என்பதால், உத கையில் இருந்து கீழ் நோக்கி மசினகுடி, தெப் பகாடு வர வெளியூர் வாகனங்கள் அனுமதிக் கப்படுவதில்லை. முதுமலை புலிகள் காப்ப கத்தின் நடுவே மாயாறு ஓடுகிறது. தேசிய நெடுஞ்சாலையையும், மசினகுடி சாலையை யும் இணைக்கும் வகையில் மாயாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. பழமை வாய்ந்த இப்பாலம் பழுதடைந்ததால் கனகர வாகனங் கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுகிறது. இப் பகுதியில் புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி யில் புதிய பாலம் கட்ட ரூ.1.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படு புதிய பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன. இதனிடையே கூட லூர் பகுதியில் அடிக்கடி பெய்த மழை கார ணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கால் பாலம் கட்டும் பணிகள் தாமதம் ஏற்பட்டது. தற்போது, தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் மேற்புறம் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி கள் துவங்க உள்ளதால் மார்ச் மாத இறுதிக் குள் பாலம் கட்டும் பணி நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
ஈரோடு, ஜன.24- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனச் சரகத்திற்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் ஞாயிறன்று இரவு 9 மணி அள வில் டீக்கடையின் முன்பு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகு தியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று, அந்த நபர் கண்முன்னே பாய்ந்து ஓடியுள் ளது. இதை பார்த்து, அந்த நபர் அலறி கூச்ச லிட்டார். இதையடுத்து அப்பகுதியில் திரண்ட மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையினர், அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அரியப்பம்பா ளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனத் துடனும், இரவு நேரங்களில் தேவையில்லா மல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்கா ணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக் கப்படும் என வனத்துறையினர் தெரிவித்த னர்.
கூடைபந்தாட்ட போட்டி: தமிழக மகளிர் அணி வெற்றி
கோவை, ஜன.24- கோவையில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா கூடைப்பந்து அரையிறுதி போட்டியில், தமிழக மகளிர் அணி வெற்றி பெற்றது. கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. நான்கா வது நாளாக நடைபெறும் கூடைப்பந்தாட்ட போட்டியின் அரை யிறுதியில், தமிழக மகளிர் அணியும், மத்திய பிரதேச மகளிர் அணியும் மோதின. முதல் காலிறுதி சுற்றில், மத்திய பிரதேச அணி வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதைத்தொ டர்ந்து, தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி வீராங்கனைகள், இரண்டாம் காலிறுதிப் போட்டியில் புள் ளியை சமன் செய்தனர். தொடர்ச்சியாக, சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்திய தமிழக வீராங்கனைகள், நான்காம் சுற்று முடிவில் 78 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர். எதிர்த்து விளையாடிய மத்திய பிரதேச அணி 65 புள்ளி கள் பெற்று தோல்வியை தழுவியது. தமிழக மகளிர் கூடைப்பந்தாட்ட அணி விளையாடிய நான்கு போட்டிகளி லும் வெற்றிவாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.