நாமக்கல், ஜன.22- நாமக்கல்லில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, தலைகவசம் அனியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த 30 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபரா தம் விதிக்கப்பட்டது. தேசிய சாலை பாதுகாப்பு மாதம், வட்டார போக்குவரத்து துறை சார்பில், கடந்த ஜன.15 ஆம் தேதி முதல் பிப்.14 ஆம் வரை கொண்டாடப்படுகிறது. அதன்ஒருபகுதியாக, நாமக் கல்லில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து, வட்டார போக்குவரத்து துறை சார்பில், விழிப்பு ணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சிக்கு, நாமக்கல் வடக்கு, தெற்கு போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கு, அதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டு, 30 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் மகேஸ்வரி, சரவணன், நித்யா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.