districts

img

தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம்

திருப்பூர், செப். 1 - திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வியா ழக்கிழமை மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்டது.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச் சித் திட்ட பணிகள் சார்பில் ஊட்டச்சத்து  விழிப்புணர்வு குறித்த கண்காட்சி மற் றும் ஊட்டச்சத்து மாத விழா நடத்தப்பட் டது. செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச் சத்து மாத விழா நடை பெறும். இதில் பொது மக்களுக்கு ஊட் டச்சத்து குறைபாடு தொடர்பான விழிப் புணர்வு மற்றும் திட்டம் சார் விழிப்பு ணர்வு கண்காட்சி நடைபெறும். செப்டம் பர் மாதம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகம், வட்டார அலுவல கங்கள் மற்றும் அனைத்து அங்கன்வாடி  மையங்களிலும் நடத்தவும், மேலும் ஒவ் வொரு ஊராட்சியிலும் சிறப்பு கிராம சபைக்  கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய் யப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 14 வட்டாரங் களில் 1512 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில் 1381 அங்கன் வாடி பணியாளர்களும், 1255 உதவியா ளர்களும் பணி புரிகின்றனர். கர்ப்பினி கள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது  முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள்  மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட் டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந் நிகழ்வில் மாவட்ட திட்ட அலுவலர் கு. மரகதம் வரவேற்றார். இவ்விழாவில் பலர் கலந்து கொண்டனர்.