districts

img

தேசிய ஊட்டச்சத்து மாதம்: விழிப்புணர்வு கண்காட்சி

கோவை, செப்.4– தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா துவக்கி வைத்தார்.  செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச் சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படு கிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதி யாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஊட்டச்சத்து மாதம் குறித் தான விழிப்புணர்வு கண்காட்சி அமைக் கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட வரு வாய் அலுவலர் ஷர்மிளா துவக்கி வைத்து பார்வையிட்டார்.  இதில், ஊட்டச்சத்து நிறைந்த  உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட் டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணிகள், தாய் மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள், பழங் கள், கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ் வில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில், ஊட்டச்சத்து மாத உறுதிமொழி  எடுத்துக் கொள்ளப்பட்டு கையெழுத்து  இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவ லர் துவக்கி வைத்தார். இம்மாதம் முழு வதும் அங்கன்வாடி மையங்களில் ஊட் டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.