districts

img

தேசிய அளவிலான யோகா போட்டி கோவை மாணவர்கள் சாதனை

கோவை, ஜூலை 12- அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவி லான யோகா போட்டியில் வென்ற கோவை  மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. அந்தமானில் அண்மையில் 6 ஆவது  தேசிய அளவிலான யோகா போட்டி நடை பெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நா டகா, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், தெலுங் கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். சப்  ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர்  என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில், தமிழகம் சார்பாக கோவையி லிருந்து ஓசோன் யோகா சென்டர் பயிற்சியா ளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 10  பேர் கலந்து கொண்டனர். இதில், 6 பேர்  முதல் இடத்தையும், ஒருவர் இரண்டாம் இடத் தையும், 3 யோகா ஆசிரியர்கள் அனைத்து விதமான யோகா சாம்பியன்ஷிப் பெற்று வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவி கள் கூறுகையில், தொடர்ந்து இது போன்று சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவோம்  என நம்பிக்கை தெரிவித்தனர்.