சேலம், ஜன.29- சேலத்தில் 3 நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான நீதிமன்ற வழக்கு வாதப்போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் தேசிய அளவிலான நீதிமன்ற வழக்கு வாதப் போட்டி – 2024 தொடக்க விழா கல்லூரியின் அரங்கத்தில் ஜன.26,27,28 ஆகிய தேதி களில் நடைபெற்றது. முதல் நிலை, கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச்சுற்று என நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இதில் பல் வேறு மாநில சட்டக்கல்லூரியைச் சார்ந்த 28 அணிகள் பங்கேற்றன. நடுவர்களாக பல் வேறு சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட னர். நிறைவு விழாவான ஞாயிறன்று சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ராஜரத்தினம் மற்றும் திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழக முனைவர் பால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் நிறைவுநாள் பரிசளிப்பு நிகழ்ச் சியில் கல்லூரியின் துணை முதல்வர் சாந்த குமாரி வரவேற்றார். கல்லூரியின் தலைவர் சரவணன் தலைமை வகித்து, வெற்றியாளர் களை அறிவித்து விருதுகளும் கேடயங்க ளும் வழங்கினார். அப்போது திருச்சி தேசிய சட்டப்பல் கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் பேசு கையில், மாணவர்கள் நிறைய வழக்கு வாதப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதற்கு தினமும் பயிற்சியுடன் கூடிய உள்ளார்ந்த ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும். அடிப் படை சட்டத்தை அறிந்து அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும், என்றார். இதையடுத்து தமிழ்நாடு மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ராஜரத்தினம் பேசு கையில், இன்றைய வளர்ச்சியடைந்த சமுதா யத்தில் மாணவர்கள் தங்களது சட்ட அறிவை மேம்படுத்திக்கொள்ள பலதரப்பட்ட வாய்ப்பு கள் உள்ளன. அதனை உங்களின் பெற்றோர் கள் மிகச்சிறப்பாக தங்களுக்கு அளித்துள்ள னர், எனவே, அதனை சிறந்த முறையில் பயன் படுத்தி சிறந்த வழக்கறிஞராக மேம்பட வேண் டும், என்றார். இப்போட்டிகளில் ராமையா காலேஜ் ஆப் லா, பெங்களூரு அணியைச் சேர்ந்த தனுஷ், அப்பாஸ் அஹமத் மற்றும் ரோகன் ராய் முதல் பரிசை பெற்றனர். சென்னை டாக் டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுப் பாக்கம் அணியைச் சேர்ந்த சிந்து வர்ஷினி, ஆகாஷ் சூர்யா மற்றும் மோகனகிருஷ்ணன் இரண்டாம் பரிசை பெற்றனர்.
சிறந்த வழக் கறிஞர் மாணவருக்கான விருதை யுனிவெர் சல் ஸ்கூல் ஆப் லா பெங்களுருவைச் சேர்ந்த பாண்டுரங் கிரீஸ், சிறந்த வழக்கறிஞர் மாண வருக்கான இரண்டாம் இடத்துக்கான விருதை ராமையா காலேஜ் ஆப் லா பெங்க ளூரு அணியைச் சேர்ந்த அப்பாஸ் அஹ மத், சிறந்த வழக்கறிஞர் மாணவிக்கான விருதை யுனிவெர்சல் ஸ்கூல் ஆப் லா பெங்களுருவைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா மற்றும் சிறந்த வழக்கறிஞர் மாணவிக்கான இரண்டாம் இடத்துக்கான விருதை அரசு சட்டக்கல்லூரி திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஹிரித்யா ஹரிகுமார் பெற்றனர். சிறந்த எழுத்துபூர்வமான வாதுரைக் கான விருதை சிம்போசிஸ் லா ஸ்கூல் பூனே மாணவி பூமிகா மற்றும் சிறந்த எழுத்துப் பூர்வமான வாதுரைக்கான இரண்டாம் இடத் துக்கான விருதை சென்னை டாக்டர் அம்பேத் கர் அரசு சட்டக்கல்லூரி, புதுபாக்கம் அணி யைச் சேர்ந்த மாணவர் மோகனகிருஷ்ணன் என்பவரும் பெற்றனர். சிறந்த நன்னடத்தைக் கான விருதை கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரி அணி பெற்றது. சிறந்த நன்னடத் தைக்கான இரண்டாம் விருதை யுனிவெர்சல் ஸ்கூல் ஆப் லா பெங்களுரு அணி பெற்றது. சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதை அரசு சட்டக்கலூரி கேரளா அணி பெற்றது. சிறந்த ஆராய்ச்சியாளருக்கான இரண்டாம் விருதை யுனிவெர்சல் ஸ்கூல் ஆப் லா பெங் களுரு அணி பெற்றது.