districts

img

தேசிய நுகர்வோர் உரிமை தின விழா பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர், டிச.25- திருப்பூரில் டிசம்பர் 24 ல் தேசிய நுகர்வோர் உரிமை தின விழா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருமுருகன்பூண்டி ஏவிபி லே-அவுட் பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் ஹாலில் நடைபெற்றது.  திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாது காப்பு துறை, தி கன்ஸ்யூமர்ஸ் கேர்  அசோசியேஷன் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3203 இல் உள்ள  திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம், ஆனந்தம் ரோட் டரி சங்கம், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம், நிட் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகி யவை இணைந்து  டிசம்பர் 24 ல் தேசிய நுகர்வோர் உரிமை தின விழா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருமுருகன்பூண்டி ஏவிபி லே-அவுட் பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் ஹாலில் நடந்தது. இந்த விழாவுக்கு திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்க தலைவர் முஹம் மது ஜாபர் தலைமை தாங்கினார். தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன் பொதுச் செயலாளர் ராமலிங்கம் முன் னிலை வகித்தார்.  

தி கன்ஸ்யூமர் கேர்  அசோசியேசன் தலைவர் காதர்பாட்சா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலரும், கூடுதல் மாவட்ட நீதிபதியு மான ப.ராஜேந்திரன், மாவட்ட நிர்வாக மும் குடிமக்களின் ஒத்துழைப்பும் என்ற  தலைப்பிலும், மாவட்ட வழங்கல் அலுவ லரும், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான ம.முருகன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 இன் கீழ் விழிப் புணர்வு பெறுதல் குறித்தும்  சிறப்புரை ஆற்றினார்கள்.  வழக்கறிஞர் கவிதா மகளிர் விழிப்புணர்வு பற்றி பேசினார். இதனைத் தொடர்ந்து  எல்.பி.ஜி.  கேஸ் விநியோகஸ்தர்கள் சார்பில் விழிப் புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோ கிக்கப்பட்டன. மேலும், நுகர்வோர் பாது காப்பு சேவைக்காக தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன் தலைவர் காதர் பாட்சா, துணைத்தலைவர் அவனாசி லிங்கம்,  பொதுச் செயலாளர் ராமலிங் கம், அமைப்பு செயலர் கிருஷ்ண மூர்த்தி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சதாசிவம் உட்பட 14 பேருக்கு  அதிகாரி கள் கேடயம் வழங்கினர். பின்னர் பொது மக்கள் குறை தீர்ப்பு மனுக்களை  டி.ஆர்.ஓ விடம் கொடுத்தனர். விழாவில்  முருகானந்தன், கிருஷ்ணமூர்த்தி, ரவி சங்கர், விசித்ரா செந்தில்குமார், ஸ்ரீதரன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் செயற் குழு உறுப்பினர் தனசேகர் நன்றி கூறி னார்.