districts

img

தேசிய அளவிலான சிலம்பம்

சேலம், டிச. 25- சேலத்தில் தேசிய அளவி லான சிலம்பாட்டம் போட்டி  நடைபெற்றது. இதில், தமிழ் நாடு,கர்நாடகா,பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான, சிலம் பாட்ட கலையை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சேலம் மல்லூர் பகுதியில் நேஷனல் சில்வர் சிலம்பம் சாம்பியன்ஷிப் சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டியில் 3 வயது முதல் 29  வயது வரையிலான 2000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர்.்ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வால் உள்ளிட்ட பிரி வுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி னர். தமிழ்நாடு, கர்நாடகா,பஞ்சாப் மாநி லங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் வெள்ளி காசுகள் வழங்கப் பட்டது.