districts

img

இந்தியாவில் மிகவும் பலவீனமான பிரதமர் நரேந்திர மோடி

ஈரோடு, செப்.26- ஆர்எஸ்எஸ் அமைப்பின் உத்த ரவை அச்சாரம் பிசகாமல் நிறை வேற்றும் மோடி, சுயமாக முடி வெடுக்க முடியாத இந்தியாவின் மிகவும் பலவீனமான பிரதமர் என   கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டினார்.  ஈரோட்டில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் எதிர்ப்பு கருத் தரங்கம் நடைபெற்றது. இதில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகை யில், தமிழ்மொழி தொன்மையான மொழி. அதே நாகர்கள் வட இந்தி யாவில் வெவ்வேறு மொழி பேச  தொடங்கிவிட்டார்கள் என்கிறது அம்பேத்கரின் ஆய்வு. இந்த முக் கியமான ஆய்வை, மானுடவியல் அறிஞர்கள், மொழி அறிஞர்கள் மிகப்பெரிய அளவிற்குச் கொண்டு  சென்றிருக்க வேண்டும். இந்தியா வின் மரபு என்ன என்பது தான் கேள்வி? தமிழோடு அவர்கள் மிக நெருக் கமாக இருப்பது போல காட்டிக் கொள்வர். திருவள்ளுவரைச் சொல் வார்கள். தமிழர்கள் இயல்பான அறிவியல் சார்ந்த பரிணாம வளர்ச்சியை ஏற்றுக் கொண்டவர் கள். அதனால் திருவள்ளுவர் பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும், என் றார். 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சூழலியல் அறிஞராக இருந்தார் என்பதைப்  பார்க்க முடியும். அந்த திருவள்ளு வர் எனக்குச் சொந்தக்காரன் என்று  சொல்லிக் கொண்டு விஸ்வகர்மா யோஜனாவைக் கொண்டு வருகின் றனர். இவர்கள் சாதி என்பது அழகிய சொல் என்கின்றனர். பரம்ப ரையாக ஒரு கைவினை கலைஞன் தைக்கும் செருப்பு மிகுந்த முழுமையாக, அருமையாக இருக் கும் என்கிறார் ஒருவர். அப்படி யெனில் அது என் மரபில் ஜீனில்  இருக்கிறது என்கிறாரா? நான் செருப்பு தைக்க மட்டும் பிறந்தவன்  என்கிறார் அவர். 17 தொழில்களை பட்டியல் போடுகின்றனர். அந்த 17  சாதியினர் அவர்களது தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் கொடுக் கிறார்கள் 18 வயதில். அந்த வயதில்  அவர் கல்லூரியில் இருக்க வேண் டும். இது புரியமால் நீட் புரியாது. நாமெல்லாம் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இதையெல்லாம் செய்து கொண்டுள்ளனர் என  நினைத்தோமானால், பரிதாபத்திற் குரியவர்கள் உலகில் வேறு எவரும்  இல்லை. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் மிகவும் பலவீனமான பிரதமர் நரேந்திர மோடி தான். அவருக்கு தன் மீதும் நம்பிக்கை இல்லை. தன் கட்சி மீதும் நம் பிக்கை இல்லை. அதனால் தான்  நேருவைத் திட்டியே வாக்கு கேட் கிறார். நாக்பூரைத் தலைமையி டமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறதோ அதைச் செய் வதற்கு மோடி தவறுவாறேயா னால் ஒரு நிமிடம் கூட அவர் பிரதம ராக இருக்க முடியாது. அதுபோல  அமித்ஷா தவறினாலும் அமைச் சராக இருக்க முடியாது. இதுதான் அவரின் பரிதாபத்திற்குரிய நிலைமை. ஆர்எஸ்எஸ் அமைப்பு எல்லாரும் எல்லாமும் படிக்க வேண்டுமென அவசியமில்லை என்கிறது.

துரோணாச்சாரியாரின் பேர பிள்ளைகள் இஸ்ரோ-வின் தலைவராக ஆகவே முடியாது போலிருக்கிறது. அதனால் தான் 1  ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம்  வகுப்பு வரை கற்றதை சான்ற ளித்து நீ வெளியே வந்தால் மேல் படிப்பிற்குத் தகுதியில்லை என்று சொல்வதுதான் கர்ணனுக்கு விடப் பட்ட சாபம். அதுதான் இன்றைக்கு நம்முடைய குழந்தைகளுக்கு நீட்,  கியூட் என்கிற சாபம்.  குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த வர்கள் மட்டுமே மருத்துவராக முடியும். அதுதான் மரபு மீட்டுதல், விஸ்வகர்மான யோஜனா. உனக்கு கடவுள் கொடுத்த பணி வேறு. ராணுவ பணி என்பது மகத்தான  பணி. ஆனால் அத்துக்கூலிக்கு வா  என ராணுவத்திற்கு அழைக்கின் றனர். 4 வருடம் கழித்து 10 லட்சம்  தருகிறோம். அதை வைத்துக் கொண்டு செருப்பு தைப்பவன் என் றால் செருப்பு தை. குடும்ப தொழிலை செய்து கொள். என் னிடம் வேலை, கல்வி எதுவும்  கேட்கக்கூடாது. மருத்துவராக  வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. எனவே, நீட்டிற்கும், பிரதம மந்திரி பதவிக்கும் தொடர்பு இருப் பதை மறந்து விடக்கூடாது.  எனவே  மரபை மீட்கிறோம் என அவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்தால் நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்கிறோம். இந்த புரிதல் இருந்தால் நீட்டைப் பற்றி அதிகம்  பேச வேண்டியதில்லை என்றார்.