சேலம், ஆக.31- ஏற்காடு அரசு மருத்துவமனையில் பணியின்போது மருத்துவர் குடிபோதையில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 67 மலை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களின் முக்கிய சிகிச்சை மையமாக ஏற்காடு அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு அனைத்து நோய்களுக்கும் முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று செல்லையா (70) என்ற முதியவரை உடல் நிலை குறைபாட்டால் சிகிச் சைக்கு உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர். அப்போது பணியிலிருந்து அரசு மருத்துவர் செந்தில் குடிபோதையில், சிகிச்சைக்கு வந்த நபரிடம் தரக்குறை வாகவும், தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளியதாக தெரி கிறது. இச்சம்பவத்தையறிந்து காவல்துறை மற்றும் செய்தி யாளர்கள் வந்துள்ளனர். அவர்களையும் தகாத வார்த்தை யால் வசை பாடியுள்ளார். இதையடுத்து முதியவரின் பேரன் கவுதம் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ஏற்காடு ஆய்வாளர் செந்தில்ராஜ் மோகன் தலை மையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.