ஈரோடு, பிப்.13- நம்பியூர் பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. நம்பியூர் காந்திபுரம் மற்றும் இருகாலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தையொன்று உலா வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தை அங்கி ருந்த மூன்று ஆடுகளை கடித்துக் கொன்றது. பின்நாளில் மீண்டும் புகுந்த சிறுத்தை இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்றது. இதனால் நம்பியூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் அச்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் டி.என்.பாளையம் வனத்துறையினர் ஈடு பட்டனர். இதற்காக நம்பியூரை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களையும் வனத்துறையினர் பொருத்தினர். ஆனால், கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்கா ணிக்க நவீன தெர்மல் கேமராவையும் வனத்துறையினர் பயன்படுத்தினர். எனினும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடி யவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று பட்டப்பகலில் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை பகுதியில் புகுந்த சிறுத்தையானது, அங்கிருந்த 4 நாய்களை கடித்துக்கொன் றது. இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதையடுத்து நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை, இருகாலூர் உள்ளிட்ட இடங்களில் சிறுத் தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. மேலும், டி.என். பாளையம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியி லும், இரவு நேரங்களில் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ள னர்.