நாமக்கல்,அக்.15- நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் நடத்திய சோதனையில் பலகோடி ரூபாய் பணம் சில முக்கிய ஆவ ணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாக வருமான வரித்துறை வட்டா ரத்தில் தெரிவிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கீரின் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் நீட் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. இங்குப் பயிலும் மாணவர்களிடம் அளவுக்கு அதிகமாகப் பணம் வசூலிக்கப்படுவதாக பள்ளிக்குத் தொடர்புடைய இடங்களில் வரு மான வரித்துறை அதிகாரிகள் சோத னை மேற்கொண்டனர். பள்ளி, நீட் பயிற்சி மையம், பள்ளியின் தாளா ளர் சரவணன் மற்றும் இயக்குநர்கள் வீடுகளில் கடந்த 11 ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வந்தனர். அப்பள்ளியின், சார்புநிறுவனங்களான பெருந்துறை கிரீன் கார்டன் மெட்ரிக் பள்ளி, கரூர் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, சென்னை கிரீன் பார்க் அகாடமிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் கணக்கில் காட்டப்படாத 150 கோடி ரூபாய் வருமானம் கண்டறியப்பட்டது. நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி கலை யரங்கத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்த சுமார் 30 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறி முதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அக்டோபர் 14 அன்று கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் மாண வர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், அதே போல் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சில ருக்கும் முறைகேடாகப் பணப் பரி வர்த்தனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் ஆயிரக்கணக்கான மாண வர்கள் பயின்று வருகின்றனர். குறை ந்தது ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், ஆனால் குறைந்த அளவு பணம் வசூ லிக்கப்பட்டதாக ரசீது வழங்கியிருப்ப தாகவும் வருமான வரித் துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பள்ளித் தாளாளர் சர வணனின் வங்கிக் கணக்கு முடக்கப் பட்டுள்ளதாகவும், இதில் தொடர் புடைய சிலரின் வங்கிக் கணக்குகளை ஆராயவுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் பல மாணவர்கள் மற்றும் அவர் களது தந்தையர்கள் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இந்த குற்றச் செயலுக்குப் பின்னால் பல நீட் பயிற்சி மையங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.