சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்க நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சிஐடியு அலுவலகத்தில், துணை ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது. ஜூலை 25 - 28 வரை மாவட்டத்தில் 9 மையங்களில் பிரச்சார இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் தே.சரவணன், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுச்சாமி, தலைவர் எம்.அசோகன், மாதர் சங்க மாவட்ட தலைவர் ராணி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.