நாமக்கல், டிச.18- குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் பாரதி பிறந்த நாள்விழா கொண்டாடப்பட் டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பாக பள்ளிபாளையம் பிரிவு சாலை சம்பூரணியம்மாள் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா விடியல் பிர காஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இல்லம் தேடி கல்வி மாணவர்கள் 30-க் கும் மேற்பட்டோர் பாரதியார் வேடம் அணிந்து, நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இவர்க ளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட் டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் தவமணி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் அம் பிகா, சமூக ஆர்வலர் சித்ரா, பஞ்சாலை சண் முகம், தீனா உள்பட பலர் பங்கேற்றனர். ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் பொது மக்கள் பெருமளவில் பங்கேற்றனர். டிச.22 வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.