நாமக்கல், பிப்.17- நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் 1,392 பேருக்கு தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்பட் டுள்ளனர். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளி பாளையம் மற்றும் குமார பாளையம் ஆகிய 5 நகராட்சி களில் உள்ள 151 வார்டுகள், 19 பேரூராட்சிகளில் உள்ள 288 வார்டுகள் என மொத்தம் 439 வார்டுகளுக்கு பிப்.19 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக் குச்சாவடிக்கும், தலைமை தேர்தல் அலுவலர், வாக்குப் பதிவு அலுவலர் நிலை எண் 1, 2, 3 என மொத்தம் 3,328 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களில் தகுதி யானவர்களுக்கு தபால் வாக்குச் செலுத்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,392 பேருக்கு தபால் வாக்குகள் செலுத்து வதற்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை முறை யாக பூர்த்தி செய்து அதற்கான உறையில் வைத்து நன்கு ஒட்டி செலுத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இறுதிக் கட்டப் பயிற்சி நடைபெறும் மையங்களில் தபால் வாக்குகளுக்கான பெட்டியில் பூர்த்தி செய்த படிவங்கள் அடங்கிய உறைகளை செலுத்தலாம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22 ஆம் தேதி காலை 8 மணிக்குள் தபால் வாக்குகளைச் செலுத்திட வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.