districts

img

நாமக்கல்: சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனு

நாமக்கல், பிப்.4- நாமக்கல் மாவட்டத்தில் உள் ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நகராட்சி 18 ஆவது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம். சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் திமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், ஒன் றிய செயலாளர் ஆர்.ரவி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இராசிபுரம் நகராட்சி 23 ஆவது  வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.வெங்கட்ராமன் வேட்பு மனு  தாக்கல் செய்தார். உடன் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, பிரதேச குழு செயலாளர் கோ. செல்வராசு, சி.சண்முகம் உள்ளிட்டோர் உள்ள னர். எருமப்பட்டி  பேரூராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி யின் வேட்பாளர்கள் 10 ஆவது வார்டு ஆர்.ராமகிருஷ்ணன், 13  ஆவது வார்டு எஸ்.கே.சிவச்சந்தி ரன், 14 ஆவது வார்டு ஆர்.ஜெய ராமன் ஆகியோர் வேட்பு மனு தாக் கல் செய்தனர். இந்நிகழ்வின்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்  ந.வேலுசாமி, மாவட்டக் குழு  உறுப்பினர் கு.சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆலம்பாளையம்  பேரூராட்சி, 14 ஆவது வார்டு உறுப்பினர் பத விக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.ராணி ராஜாவேட்புமனு தாக்கல் செய்தார். இதில், திமுக கிளைச் செயலாளர் சுந்தரம், சிபிஎம் ஒன்றிய செயலா ளர் ஆர்.ரவி ஆகியோர் உடனிருந்த னர். ஆர்.பட்டணம் பேரூராட்சிக்குட் பட்ட 8 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் பி.ராணி (எ) கிருஷ்ணவேணி வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.செல்வராசு உடனி ருந்தார்.