வறட்சியின் பிடியில் நாகாவதி அணை
வறட்சியின் பிடியில் நாகாவதி அணை தருமபுரி, பிப்.19- நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்து போன தால், போதிய நீர்வரத்தின்றி வறட்சியின் பிடியில் சிக்கிய நாகா வதி அணை, குட்டை போல் காட்சியளிக்கிறது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நாகாவதி அணை அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் இந்த அணை கட்டப்பட்டது. அணையின் இடது மற்றும் வலது புறகால்வாய்கள் மூலம் அரக்காசனஹள்ளி யில் 417.77 ஹெக்டேர், சின்னம்பள்ளி பகுதியில் 722.61 ஹெக் டர், பெரும்பாலை பகுதியில் 852.62 ஹெக்டேர் என மொத்தம் 1993 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. கடந்த 2021 – 2022 ஆம் ஆண்டுகளில் போதிய மழை பெய்ததால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இந்நிலையில், கடந்தாண்டு போதிய மழை பெய்யாததால், நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந் தது. தற்போது அணையானது குட்டை போல் காட்சியளிக்கி றது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
பாஜகவின் கிளை அமைப்பான வருமான வரித்துறை: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பாஜகவின் கிளை அமைப்பான வருமான வரித்துறை: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் சேலம், பிப்.19- ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில், வங்கி கணக்கை முடக்கிய வருமான வரி துறையின் செயலை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசு சுயேட்சையான மத்திய அமைப்பு களை பாஜகவின் கிளை அமைப்புகளாகவும், பாஜகவிற்கு ஆள்சேர்க்கும் துறையாக செயல்படுகிறது என்கிற குற்றச் சாட்டு தொடர்ந்து அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்நிலையில், பாஜக அரசின் தூண்டுதலின் பேரில், வருமான வரித்துறையினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகளை முடக்கி யுள்ளனர். இதனைக் கண்டித்து சேலம் செவ்வாய்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் கும ரேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முதல்வர் குறித்து அவதூறு: திமுக புகார்
முதல்வர் குறித்து அவதூறு: திமுக புகார் நாமக்கல், பிப்.19- தமிழக முதல்வர் குறித்து அவதூறு பதிவுகள் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி ஒருங்கி ணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கார்த்திக் ராஜா, பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமாரிடம் புகார் மனு ஒன்று வழங்கினார். அதில் சமூக வலைதளத்தில் திருச் செங்கோடு அரசியல் எனும் தலைப்பில் இயங்கும் வாட்ஸ் அப் குழுவில், திமுக ஆட்சிக்கும் தமிழக முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஒரு சிலர் தவறான செய்தி களை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் பள்ளிபாளையத்தில் திவிக ஆர்ப்பாட்டம்
கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் பள்ளிபாளையத்தில் திவிக ஆர்ப்பாட்டம் நாமக்கல், பிப்.19- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதி வழியாக காவிரி ஆறு செல்கிறது. பள்ளிபாளையத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வரும் நிலை யில், இரவு நேரத்தில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யா மல், சாய ஆலை உரிமையாளர்கள் நேரடியாக சாக்கடை வழியாக கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதன்காரணமாக காவிரி நீர் மாசுபட்டு பொதுமக்கள் அந்த குடிநீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனப்போக்கால் இந்த நிலை தொடர்வதாக குற்றஞ்சாட்டி, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி உட் பட பலர் கலந்து கொண்டனர்.
பாலங்களின் தன்மை குறித்து ஆய்வு
பாலங்களின் தன்மை குறித்து ஆய்வு நாமக்கல், பிப்.19- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலிருந்து ஈரோடு செல்லும் சாலை தற்போது இரண்டு வழிச்சாலையாக உள் ளது. இந்தச்சாலை தமிழக முதல்வரின் சாலைகள் விரிவாக்க திட்டத்தின் கீழ், மூன்று வழிச்சாலையாக மாற்றியமைக்க கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து சேலம் நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு கண்கா ணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு வினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள 75 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலத் தினையும், காவிரி நகர் பகுதியில் அமைந்துள்ள 20 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்பட்ட காவிரி ஆற்றின் பாலத்தையும் ஆய்வு செய்து, அதன் தன்மை குறித்து விவாதித்தனர்.
குட்கா பறிமுதல்
குட்கா பறிமுதல் நாமக்கல், பிப்.19- நாமக்கல் மாவட்டம், பள் ளிபாளையம் நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியைச் சுற்றியுள்ள பகுதிக ளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற் கொண்டனர். இதில், ஒட்ட மெத்தை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோர் கடைக ளில், தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.4 ஆயிரமா கும். இதனைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப் பட்டு, கடைக்கு சீல் வைக்க முடிவு செய்தனர்.
பத்திரப்பதிவுக்கு அனுமதி வழங்க வணிகர்கள் கோரிக்கை
பத்திரப்பதிவுக்கு அனுமதி வழங்க வணிகர்கள் கோரிக்கை அவிநாசி, பிப்.19- அவிநாசி திருமுருகன்பூண்டி கோயிலுக்கு சொந்தமான இரு இடத்தை தவிர மற்ற நிலங்களை பத்திரப்பதிவுக்கு அனு மதிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட கோவை பிரதான சாலை, மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகளில் 200 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தினர் தற்போது தங்களது நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வங்கியில் கடன் பெறவோ தடை விதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்துள்ள னர். இது குறித்து வணிகர்கள் கூறியதாவது, அவிநாசி மேற்கு ரதவீதியில் (கா.ச.எண் 85) டீ, 85 ஈ நிலங்கள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என இந்து அறநிலையத் துறையினர் தடைச் சான்று பெற்றுள்ளார். ஆனால், இதில், 85 டீ இல் உட்பிரிவு 427/9 மற்றும் 85 இ இல் உட்பிரிவு 433/21 மட்டுமே கோயிலுக்கு சொந்தமானது எனத் தெரியவருகிறது. இருப்பினும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக மற்ற நிலங்களுக்கும் சார்பதி வாளர் அலுவலகத்தில் தடை விதிக்கின்றனர். இதனால் வங்கிக் கடன் கூட பெற முடியாமலும், தொழிலை மேம்ப டுத்த முடியாமல் உள்ளோம். ஆகவே கோயில் நிலத்தை தவிர மீதமுள்ள நிலங்களுக்கு தடையின்மை சான்று வழங்கி, பத்தி ரப்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றனர்.
கல்குவாரியில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
கல்குவாரியில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் திருப்பூர், பிப்.19- மடத்துக்குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்கு வாரியில் தடை செய்யப்பட்டுள்ள வெடி பொருட்கள் பயன்ப டுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசிகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப் பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மையவாடி கிராமம் நர சிங்கபுரம் பகுதியில், தனிநபருக்கு சொந்தமான கதிர் ப்ளூ மெட்டல்ஸ் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரி இயங்கி வரும் நிலம் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்க ளுக்கு வழங்கிய நிலம். கதிர் ப்ளூ மெட்டல்ஸ் இயங்கி வருவ தால் இந்த பகுதியில் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக் கப்ப்பட்டுள்ளது. மேலும், அரசு தடை செய்துள்ள வெடி பொருட்களை பயன்படுத்துகின்றனர். எனவே இப்பகுதி மக்க ளின் நலனை கருத்தில் கொண்டு கதிர் ப்ளூ மெட்டல்ஸ் உரி மத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்க சிபிஎம் கோரிக்கை '
குடிநீர் வழங்க சிபிஎம் கோரிக்கை திருப்பூர், பிப்.19- திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று மனு அளிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கு பாளையம் கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூ ரில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பொங்குபாளையம், பொங்குபாளை யம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், பட்டம்பாளையம், தொரவலூர், மேற்குப்பதி, சொக்கனூர் ஆகிய 10 ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு இன்னும் இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இந்தத் திட்டத்தில் அறிவித்தபடி தினசரி குடிநீர் வழங்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரூ.4.15 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
ரூ.4.15 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் அவிநாசி, பிப்.19 சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 38 விவசாயிகள் கலந்து கொண்டு 276 மூட்டைகள் நிலக்கடலையை கொண்டு வந்து இருந்தனர். திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் 3 பேர் கலந்து கொண்டனர். மறைமுக ஏலத்தின் வாயிலாக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ.6,600 முதல் ரூ.7,070 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.6,000 முதல் ரூ.6,600 வரையிலும், மூன்றாம் ரகம் ரூ.5,500 முதல் ரூ.6,000 வரையிலும் ஏலம் போனது, மொத்தம் ரூ. 4.15 இலட்சத் திற்கு ஏலம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு பிரதமரின் ஊக்கத் தொகை வழங்குவதில் குளறுபடி
உடுமலை, பிப்.19- பிரதம மத்திரியின் கெளரவ ஊக்கத் தொகை விவசாயிகளுக்கு முறையாக பணம் வழங்கப்படுவது இல்லை எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் விவசாயிகளுக்குப் பிர தம மத்திரியின் கெளரவ ஊக்கத் தொகை என்ற பெயரில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாயிரம் என வருடம் ஒன்றுக்கு ரூபாய் 12 ஆயிரம் வழங் கும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். இந்நி லையில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் சில விவசாயிக ளுக்கு மட்டும் பெயரளவுக்கு இந்த திட்டத் தின் கீழ் பணம் வருகிறது. இன்று வரை முதன் தவணை பணம் கூட கிடைக்காத விவசாயி கள் ஏராளமானோர் உள்ளனர் என்பது தெரிய வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கை யில், இத்திட்டத்தின் கீழ் சில விவசாயிக ளுக்கு பணம் வருவது இல்லை. இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளை கேட்டால் ஆவணங்களை இணைக்க சொல்கிறார்கள். விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத் திற்கு வந்தால் அதிகாரிகள் போர்டல் (சர்வர்) வேலை செய்ய வில்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். மேலும், புதிதாக திட் டத்தில் இணைக்க வேண்டும் என்றாலும் முடி யாது என்று அதிகாரிகள் கூறுவதாக தெரிவித் தனர். மேலும், இத்திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்க தொகை வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை வைத்தனர்.
ரேசன் கடைகளில் ராகி, அரிசி வழங்காததால் பொதுமக்கள் அவதி
ரேசன் கடைகளில் ராகி, அரிசி வழங்காததால் பொதுமக்கள் அவதி உதகை,பிப்.19- கூடலூர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் ராகி, அரிசி வழங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் வகையில் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் 2 கிலோ ராகி வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ராகியில் கால்சியம், தாதுச்சத்துகள், புரதங்கள், நார்ச் சத்து, இரும்புச்சத்து உள்ளிட்டவை உள்ளது. இதனால் இரத்த சோகையை போக்கி உடல் ஆரோக்கியம் காக் கிறது. ஊட்டசத்து குறைபாடுகளை போக்கும் வகையில் ரேச னில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கப்பட்டது. இந்நிலை யில் கடந்த மாதமும் இந்த மாதமும் ராகி முறையாக வழங் கப்படாமல் உள்ளது. கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாம தம் காரணமாக ராகி வழங்கப்படவில்லை என கூறப்ப டுகிறது. ராகிக்கு பதிலாக அரிசியும் வழங்கப்படாததால் பொதுமக்கள் இரண்டுமே கிடைக்காமல் அவதிக்குள்ளா கினர்.
தவறான சிகிச்சை - ஆட்சியரிடம் பெண் புகார்
ஈரோடு, பிப். 19- மருத்துவமனையில் தனக்கு தவறான சிகிச்சை அளித்தததால் பாதிக்கப்பட்டதாக பெண் ஒருவர் ஆட்சியரிடம் புகார் அளித் தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய சிகிச்சைக்கு உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம், கீழ்வாணி பகுதி யைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு கோபி அரசு மருத்துவம னையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட் டார். மறுநாள் சுக பிரசவம் நடந்துள்ளது. மேலும் 10 நாட்கள் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டவர், நீராகாரம் மட்டுமே அருந்த அனுமதிக்கப்பட்டார். அந்நாட்களில் மலம் கழியவில்லை. இதுகுறித்து அவரது கணவர் மருத்துவரிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல், பெருந்துறை அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கு செல் லுங்கள் என கூறிவிட்டனர். பின்னர் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழாய் மூலம் மலம் அகற்றப்பட்டது. பின்னர் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் தாங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஏழ்மை நிலையில் இருக்கும் தங்களால் செல வழித்து இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். ஆகவே, முறையான சிகிச்சைக்கு உதவி புரிய வேண்டும். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர். மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். இதுகுறித்து ரம்யாவிடம் கேட்டபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளேன். அரசு அல்லது தனியார் மருத்துவம னையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்ப டும் எனக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
110 விதியில் முதல்வர் அறிவிப்பாரா?
ஈரோடு, பிப். 19- சட்டமன்ற விவாதங்களின்போதோ அல்லது 110 விதியின் படியோ தமிழ்நாடு முதல்வர் நிலுவை கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என ஓய்வூதியர்கள் நம்பிக் கையில் உள்ளனர். தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை திங்களன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் வ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் மகளிர் மேம்பாடு உள்ளிட்ட சில அம்சங்கள் பாராட் டுக்குரியது. அதேசமயம் 70 வயதை நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம், மருத் துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறை களை நிவர்த்தி செய்தல், போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு அக விலைப்படி வழங்காதது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. சட்டமன்ற விவாதங் களின் போதோ அல்லது 110 விதியின் படியோ தமிழ்நாடு முதல்வர் ஓய்வூதியர்க ளின் நிலுவைக் கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என எதிர்பார்ப்பில் உள்ள தாகத் தெரிவித்துள்ளார்.