உடுமலை, ஏப்.10- தேர்த்திருவிழா சிறப்படைய, இஸ்லாமியர்கள் உடுமலை மாரியம் மன் கோவிலுக்கு சீர் வரிசை தட்டு டன் வந்து வாழ்த்துகள் தெரிவித்த னர். திருப்பூர் மாவட்டம், உடுமலை யில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோ றும் தேர்த்திருவிழா வெகு விமர்சை யாக நடைபெறும். தேர்த்திருவிழா விற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு காணப்படும். இந் நிலையில், உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர் கள், உடுமலை நகராட்சி தலைவர் மத் தீன் தலைமையில் பட்டுச்சேலை மற் றும் பழங்கள் கொண்ட சீர்வ ரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்த னர். கோவில் நிர்வாகிகள் அவர்க ளுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று, ரம்ஜான் வாழ்த்துக் களை தெரிவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பல்லாயிரக்க ணக்கான மக்கள் வடம் பிடித்து தேர் இழுக்கும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோ றும் நடைபெறும். இது அனைத்து மத ஒத்துழைப்புடன் அனைவரும் கொண்டாடும் திருவிழாவாக திகழ்ந்து வருகிறது. காலம் காலமாக தாங்கள் ஒத்துழைப்பு அளித்து வரு வதாகவும், இந்த வருடமும் தேர்த்தி ருவிழா சிறப்படைய வாழ்த்துகளை தெரிவிக்க வந்ததாக இஸ்லாமியர் கள் தெரிவித்தனர். தேர்த்திருவிழா சிறக்க வாழ்த்த வந்த இஸ்லாமியர் களின் செயலும், அவர்களுக்கு கரம் ஜான் வாழ்த்துகளை தெரிவித்த கோவில் நிர்வாகிகள் அன்பும் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியது. காலம் கால மாக இரு மதத்தினரும் நல்லிணக் கத்துடன் வாழ்ந்து வருவதை வெளிப் படுத்துவதாக இருந்தது. இந்நிகழ்வில், பரம்பரை அறங் காவலர் ஸ்ரீதர், பூர்வீக பள்ளி தலை வர் ஹாஜி சேக்தாவுத், செயலாளர் ஹாஜி தாகிர்பாசா மற்றும் அப்துல் ரஹ்மான், சிற்பி ஹக்கீம் த.மு.மு.க கமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.