districts

img

முருங்கப்பாளையம் மாகாளியம்மன் கோயில் நிலம் மீட்பு

திருப்பூர், பிப். 19 - திருப்பூர் முருங்கப்பாளையத்தில் தனி யார் ஆக்கிரமிப்பில் இருந்த மாகாளியம் மன் கோயில் நிலத்தை வருவாய்த்துறை நிர் வாகத்தினர் காவல் துறைப் பாதுகாப்புடன் மீட்டனர்.  திருப்பூர் மாநகராட்சி குமார் நகர் அருகே  முருங்கப்பாளையம் பகுதியில் மாகாளி யம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை ஒட்டி பின்புறமாக கோயிலுக்குச் சொந்தமான  இரண்டரை சென்ட் இடத்தை தனியார் ஒருவர்  ஆக்கிரப்பு செய்து பழக்கடைக்கு வாட கைக்கு விட்டிருந்தார்.  இது குறித்து கோயில் கமிட்டியினர்  உள்ளிட்ட பொது மக்கள் வருவாய்த்துறை யில் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் இக் கோயில் திருப்பணி செய்வதற்கான ஏற்பாடு  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரு வாய் நில அளவைத் துறையினர் ஆய்வு செய் ததில் இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமா னது, தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்பது உறுதியானது. இதையடுத்து திருப் பூர் வடக்கு வட்டாட்சியர் மகேஸ்வரன் ஆக்கி ரமிப்பு செய்திருக்கும் கோயில் இடத்தை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட தனியா ருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எனினும்  குறித்த காலக்கெடுவுக்குள் தனியார் அந்த இடத்தைக் காலி செய்யவில்லை. இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று வருவாய்த்துறை துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் அங்கு வந்து காவல் துறை பாதுகாப்புடன் தனியார் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஊர்ப்  பொது மக்கள் முன்னிலையில் அந்த இடம்  கோயில் கமிட்டி வசம் ஒப்படைக்கப்பட்டது.